பக்கங்கள்

புதன், 11 ஜனவரி, 2017

இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழி தமிழ்!

நாம் நினைவிற்கொள்ள வேண் டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல், தமிழ் என்னும் மூலச் சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம் பெற்றபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமில்லா ஆகி முடிவில் திராவிடா என்று உருத்திரிந்தது. திராவிடா என்னும் சொல் ஓரின மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற் கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம், தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப் பட்டு வந்தது என்பதே ஆகும்.

உண்மையில் இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழி யாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத் திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இதில் விந்தை என்னவென்றால் இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்ப தாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு விட்டு அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால், தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை.

தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர். ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதிற்கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன் படுத்தும் படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள லாம். திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தி யாவின் நாகர்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழியை தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திரா விடர்கள் என்று கூறிக்கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்;

அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்து வதைக் கை விட்டுவிட்டதன் காரண மாக திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிகமிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப் படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

- அம்பேத்கர் தொகுப்பு - 14 (பக்கம் 94-95

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக