பக்கங்கள்

புதன், 18 ஜனவரி, 2017

சூரியன் நகர்வை கணிக்கும் 6,000 ஆண்டு பழைமையான கல் சவுக்கை

சூரியன் நகர்வை கணிக்கும் 6,000 ஆண்டு பழைமையான கல் சவுக்கை
பழநி அருகே கண்டுபிடிப்பு



பழநி, ஜன. 18- திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாப்பம்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது கொத்தன்கரடு. இங்கு இரண்டு மலைகளுக்கு இடையில் சுமார் 8 டன் எடை கொண்ட மூன்று கற்கள் அடுக்கி வைக்கப் பட்டது போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது. தகவலறிந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த கற்குவியல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய னின் நகர்வை கணிக்க ஏற்படுத்தப்பட்ட சவுக்கை. இடது பக்கத்தில் மூன்று பாறைகளும், வலப்பக்கத்தில் மூன்று பாறைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட் டுள்ளன. மேற்பகுதியில் கற்களால் பலகைக்கோடு ஒன்றும், துவாரமும் அமைக்கப் பட்டுள்ளது. தை ஒன்றாம் தேதி முதல் ஒரு வாரத்திற்குள் சூரியன் மறையும் போது இந்த துவாரத்தின் வழியே ஒளி வெளிவரும். ஆடி ஒன்று முதல் ஒருவாரத்திற்கு சூரியன் உதயமாகும் வேளையில், ஒளிக்கதிர்கள் இந்த துவாரம் வழியே வரும்.

தை ஒன்று முதல் 6 மாதம் சூரியன் வடக்கு நோக்கி நகரும். இது உத்தராயணம் எனப்படும். ஆடி ஒன்று முதல் 6 மாதம் தெற்கு நோக்கி நகரும். இது தட்சிணாயணம் எனப் படும். இந்த வடக்கு, தெற்கு நகர்வை கணிக்கும் வானியல் அறிவியல் அப்போதே இருந்துள்ளது என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை இந்த அமைப்பின் மூலமே கண்டறிந்து விவசாயம் செய்துள்ளனர். இவ்வளவு அதிக எடையுடைய கற்களை, சிறிய தேங்காய் அளவிலான கல் இன்றளவும் தாங்கிப்பிடித்துள்ளது வியப்பின் உச்சமாக உள்ளது.

பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற வெளிநாடு களிலும் சூரிய நகர்வை கணிக்கும் கல் அமைப்பு உள்ளது. ஆனால் அவை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே உள்ளன. ஆனால் இங்குள்ள அமைப்பு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற அரிய குறியீடு, நினைவுச்சின்னங்களை அழியா மல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

-விடுதலை,18.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக