பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2019

தமிழ்நாடு பெயர் மாற்றம் சட்டமன்ற நடவடிக்கைகள்



"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது.

"மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபை யில் 18-.7-.1967 அன்று முதல்_அமைச் சர் அண்ணா கொண்டு வந்தார்.

கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா. ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். பாலசுப்பிரமணியம் (கம்யூனிஸ்டு) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக் கக் கூடாது" என்று கூறினார்.

ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ் நாடு" பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத் தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார். தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:

"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக உயிர்ப்பூர்வமாக ஆதரிக் கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்க லாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித் திருந்தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.

பாரதிக்கு தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக் கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக் காதா? முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது.

அடக்கிக்கொண்டேன். "தமிழ் நாடு" என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."

இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசுகையில் அண்ணா கூறியதாவது:

"இந்த நாள் ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறை வேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக் கொண்டு இருந்தபோது, "தமிழ் நாடு" என்ற பெயரை சட்டமன்றத் தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் நாடா ளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட் ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துட னும் "டமில் நாட்" (தமிழ் நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல.

தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ் நாட்டு வெற்றி. இந்த வெற் றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்.

அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாருக்கு நினை வுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற் றத்துக்குப் பேராதரவு அளித்ததற் காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோ சனை சொல்லாமல் இதற்கு பேரா தரவு அளிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப் பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஒருமன தாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்ட பமே அதிரும் வண்ணம் உறுப்பி னர்கள் கைதட்டி ஆரவாரம் செய் தார்கள். பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு" என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ் நாடு" என்று 3 முறை குரல் எழுப் பினார். எல்லா உறுப்பினர்களும் "வாழ்க"    என்று குரல் எழுப்பினார்கள்.

சபை முழுவதிலும் உணர்ச்சி மயமாக காட்சி அளித்தது.

-  விடுதலை நாளேடு, 18.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக