பக்கங்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2019

நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 22- மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட தினமான நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்தது. கூட்டுறவு, பொதுப்பணித் துறை, செய்தி மற்றும் விளம் பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

”ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1ஆ-ம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. ஏற்கெனவே, நவம்பர் முதல் தேதியை, கருநாடகா, ஆந் திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகிறது.

தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக் கப்படும் மற்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

 - விடுதலை நாளேடு, 22.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக