பக்கங்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2019

தமிழகத்தில் முதல் முறையாக பெரிய அளவிலான சங்க காலக் கிணறுகள் கண்டறிதல்

திருவள்ளூர், ஜூலை 28 திருவள்ளூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் சங்க காலத்தைச் சேர்ந்த, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, செங்கற் களால் கட்டப்பட்ட கிணறு மற்றும் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருள் துறையினர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் அருகே கொசஸ்சலை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில் நடந்த அகழாய்வில் கற்கருவிகள் மட்டுமின்றி இரும்புக் காலம் மற்றும் வர லாற்றுத் தொடக்க கால தொல் லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு கடந்த 2015-16-இல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணி முதல் முறையாக நடத்தப்பட்டது. அப்போது ஆனை மேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய கிராமங்களில் 300 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்த அகழாய்வில் 12 குழிகள் தோண்டப்பட்டன. அங்கு 203 வகையான தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18-ஆம் ஆண்டிலும் பட்டரைப்பெரும் புதூரில் அகழாய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது, 525 சதுர மீட்டர் பரப்பளவில் 21 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
அங்கு 1,201 வகையான தொல் பொருள்கள் கிடைத்தன. அதில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற் கருவிகள், இரும்புக் கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், பவளம், பளிங்கு, செவ் வந்திக்கல் போன்ற அரிய வகைக் கற்களால் செய்யப்பட்ட மணிகள், கல்மணிகள், சங்கு வளை யல்கள், சுடுமண்ணாலான பொம் மைகள், விளையாட்டுப் பொருள்கள், காதணிகள், சில்லுகள், செம்பினால் செய்யப்பட்ட பொருள்கள், யானைத் தந்தத்தால் ஆன பொருள்கள், எலும்பினால் செய்த அம்பு முனைகள், அம்மிக்கல், தீட்டுக்கற்கள், தேய்ப்புக் கற்கள், சோழ மன்னன் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக் காசு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கும். இவை அனைத்தும் பூண்டி தொல் பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரம் ஆண்டு தொன்மையான கிணறு:
இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத வகையில், பட்டரைப் பெரும்புதூரில் சுடு மண்ணாலான உறை கிணறும், செங்கற்களால் கட்டப் பட்ட வட்ட வடிவ கிணறும் அக ழாய் வில் கண்டறியப்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து 2.85 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப் பட்ட இக்கிணறு, பழங்காலத்தில் இருந்தது போல் செங்கற்கள் உடையாமல் அப்படியே உள்ளது. இதன் விட்டம் 2.60 மீட்டர் (வெளிப்புறம்) அளவில் உள்ளது. கிணற்றின் மொத்த ஆழம் 3.91 மீட்டர். செங்கற்களின் கட்டுமானம் 56 அடுக்குகளைக் கொண்டுள்ளது.
முதல் முறையாக...:
தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இதுபோன்ற பெரிய அள விலான கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். செங்கற்களால் கட்டப் பட்ட கிணறு கண்டறியப்பட்டுள்ளது அகழாய்வின் சிறப்பம்சம்.
இது பழந்தமிழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நீர் மேலாண்மைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது. இதை பொதுக் கிணறாக மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலிருந்து அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது.
எனினும், உறைகிணற்றையும், செங்கற் களால் ஆன கிணற்றையும் பாதுகாப் பதற்கு இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை.
- விடுதலை நாளேடு, 28.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக