பக்கங்கள்

சனி, 13 ஜூலை, 2019

200 வருடத்துக்கு முந்தைய தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல் கல் அம்பாசமுத்திரத்தில் கண்டுபிடிப்பு!



நெல்லை மாவட்டம் அம்பாசமுத் திரத்திலிருந்து பிரமதேசம் செல்லும் சாலையின் இடது புறமாக, கவுதமபுரி வண்டன் குளக்கரையில் 18ஆம் நூற் றாண்டைசேர்ந்த தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.இரா சேந்திரன், இராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் வே.இராஜகுரு, கொல்லங் குடி கா.காளிராசா, அதே ஊரைச் சேர்ந்த மதியழகன் ஆகியோரடங்கிய குழுவினரால் அடையாளங் காணப் பட்டுள்ளது.

இந்த மைல் கல்லின் வரலாற்று பின்னணி குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு ஆகியோர் கூறியதாவது:அம்பாசமுத்திரம் பகுதியின் முதல் தமிழ் எண் மைல் கல் இதுவரை புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டப்பகுதிகளில் 5 மைல்கல் கல்வெட்டுகள் கண்டெடுக் கப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டுகளில் தமிழ், ரோமன்,  எண்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த மைல் கல் இப்பகுதியில் அடையாளங்காணப்பட்ட முதல் தமிழ் எண் மைல் கல்லாகும்.முதலாம் ராஜராஜன் சோழர் ஆட்சி காலத்தில் மிக முக்கியமான தளமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் 1850 ஆண்டு வரை தாலுக்கா தலைமையிடமாகவும் இருந்த பிரமதேசம் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

இது ஆங்கிலேயர் ஆட்சியின் மிக முக்கியமான கட்டுமான கட்டமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலக்கட்டத் தில் அம்பாசமுத்திரம் தொடங்கி பிர மதேசம் வரை இச்சாலையை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டி ருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கவுதமபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டில் அம்பாசமுத்திரம் “க”, பிரமதேசம் “க” அதாவது கல் வெட்டு நடப்பட்டுள்ள வண்டன் குளக்கரையிலிருந்து இரண்டு ஊர் களும் நேரெதிர்திசையில் 1 மைல்தூரம் என்று ஒரு பக்கத்தில் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் மற்றும் பிரம தேசம் செல்பவர்களுக்காக குறிப் பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டி ருக்க வேண்டும். ஆனால் இந்தவழியில் வேறு எங்கும் சாலை ஓரத்தில் இதைப் போன்ற தமிழ் எண் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் அடையாளம் காணப் படவில்லை.

இக்கல்வெட்டின் மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ் சாலையாக இருந்துள்ளதை மைல்கல் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.இது குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை என்பதால் பிரமதேசம் தாலுக்கா தலைமையகமாக  இருந்த காலக்கட் டத்தில் அதாவது கி.பி 1850க்கு முன்னதாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் சாலை அமைக்கப்பட்ட போது கிழக்கிந்திய கம்பெனியினரால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்களை  பயன்படுத்தாமல் ரோமன் எண்களையும் தமிழ் எண் களையும் மட்டுமே பயன்படுத்தி இம் மைல் கல் பொறிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ரோமன் மற்றும் தமிழ் எண்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கிய மான சான்றாக உள்ளது.

மேலும் ஆங்கிலேயர் காலத்தி லேயே தமிழ் எண்கள்அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந் துள்ளதையும், பொது மக்களும் தமிழ் எண்களையே பயன்படுத்தினர் என்பதையும் அறிந்து கொள்வதோடு தமிழ் எண்கள் சமீபகாலமாகத்தான் புழக்கத்திலிருந்து அற்றுப்போயிருக் கிறது என்பதையும் தெளிவாக்குகிறது. என்றனர்.

-  விடுதலை ஞாயிறுமலர், 15.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக