பக்கங்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2019

பெரியார் அன்று சொன்னார் (திரு)


பெரியார் ஆணைப்படி ஸ்ரீஎன்பதற்குப் பதிலாக திரு என்பதைப் பயன்படுத்த வேண்டும் என மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு நீதிக்கட்சியின் அமைப்புகள் அனுப்பிவைத்தன.இத்தீர்மானங் களுக்குப் பிறகு பெரியார் கீழ்க்காணும் வேண்டுகோள் ஒன்றினை அவரது பெயரால் ஈரோட்டிலிருந்து 10.03.1942இல் வெளியிட்டார். அவ்வேண்டுகோள் இதுதான்.

“நாம், நமது மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும், நம் மக்களுடைய பெயர்களுக்கு முன்பாக மரியாதை வார்த்தையாக இப்போது சர்க்காரால் உபயோகப்படுத்தப்படும் ஸ்ரீ என்கிற வார்த்தைக்குப் பதிலாக திரு என்கிற வார்த்தையை உபயோகப் படுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்து, சென்னை சர்க்காருக்கு அனுப்பி இருந்ததுயாவரும் அறிந்திருந்ததேயாகும்.

இப்போது, சென்னை சர்க்காரார் அந்தப்படி மாறுதல் செய்யும் விஷயத்தில் பொதுமக்களின் அபிப்பிராயம் அறிய விரும்பு கிறார்கள் எனத் தெரிவதால், தாங்கள், தங்கள் ஊரில் உடனே ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, அந்தப்படி மாற்ற வேண்டியது பற்றி தீர்மானம் நிறைவேற்றி, அதை சர்க்கார் சீப் செக்ரெடரி, மதராஸ் கவர்ன்மெண்ட், மதராஸ் என்ற விலாசத்துக்கு உடனே அனுப்பிக் கொடுத்து, விடுதலைக்கும் தெரிவிக்க வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். இது மிகவும் அவசரமான காரிய மாகும். மற்றும், தங்கள் ஊரில் வேறு சங்கங்கள் இருந்தாலும் அதன் மூலமாயும் தீர்மானம் அனுப்பலாம்.

- (‘விடுதலை ‘ 15.03.1942)

 - விடுதலை ஞாயிறு மலர், 22. 6 .19

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக