பக்கங்கள்

புதன், 26 ஏப்ரல், 2017

அய்யய்ய... இதுதான் தமிழ் வருஷப் பிறப்பாம்!அய்யய்ய... இதுதான் தமிழ் வருஷப் பிறப்பாம்!

நாரதனுக்கும் - கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகளாம்! 

வருஷம் 1: ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா என்ன, அதற்குக் கண்ணன், நான் இல்லாத பெண்ணை வரிக்க என உடன்பட்டுத்தான் வீடுகளிலும் (60,000) சென்று பார்த்து இவர் இல்லாத வீடு கிடைக்காததனால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன், அறுபது வருடம் கூடி, கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றனர்.

2. (60) பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, இவ்விருபதும்  உத்தம வருஷங்கள். ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள். பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.
(ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 6ஆம் பதிப்பு - ஜூன் 2009 - பக்கம் 1691)

-விடுதலை,13.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக