பக்கங்கள்

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

சுமார் 700 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு



எல்லைப்பட்டி, ஆக.14 புதுக் கோட்டை அருகே உள்ள எல் லைப்பட்டி கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டிய தகவல் அடங்கிய பழைமை வாய்ந்த கல்வெட்டு சனிக்கிழமை (ஆக.12 இல்) கண் டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள எல் லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு, புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினரால் கல்வெட்டு மற் றும் தொன்மை பாதுகாப்பு பயிற் சிகள் வழங்கப்பட்டு வந்தன. அப்போது, சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பு, குளம் வெட்டப் பட்ட தகவலடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் தலைவர் மேலப் பனையூர் ராஜேந்திரன், அமைப் பின் நிறுவனர் மங்கனூர் ஆ.  மணிகண்டன், ஒருங்கிணைப் பாளர் முத்துக்குமார் ஆகியோரால் கல்வெட்டு படியெடுக்கப்பட்டது.

இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறு வனர் ஆ.மணிகண்டன் மேலும் கூறியதாவது:

எல்லைப்பட்டி பள்ளி சுற் றுச்சுவரின் அருகிலேயே நீர் வரத்து, வடிகால் அமைப்புடன் பழைமையான குடிநீர்க்குளம் உள்ளது.

இது 700 ஆண்டுகளுக்கு முன்பு தென்க வீர நாடன் என்ப வரால் அமைக்கப்பட்டது என் பதை வெளிப்படுத்தும் வகையில் "ஷஸ்....ஸ்ரீ இக்குள(ம்).....(தெ)ன் க..வீர நாடன்" என்று பொறிக் கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்பு அடிப்படையில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், பொதுநல நோக்கில், மக்களின் குடிநீர், வேளாண் தேவைக்கென குளங் களையும், நீர்ப்பாசனக் கட்ட மைப்பு ஆகியவைகளை ஏற்படுத் தியுள்ளதை இக்கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

நமது முன்னோர்கள் ஏற்படுத் திய இத்தகைய நீர் மேலாண்மை கட்டுமானங்கள் உள்ளிட்ட வற்றை தற்போதைய இளம் தலைமுறையினர் சிதைத்து விடா மலும், ஆக்கிரமிப்புகளுக்கு உட் படுத்தாமலும் சமூக அக்கறை யோடு பாதுகாக்க வேண்டும். மேலும், இக்கல்வெட்டு ஒரு சமூக வரலாற்று ஆவணமாக உள் ளது என்றார்.
-விடுதலை,17.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக