பக்கங்கள்

சனி, 12 ஆகஸ்ட், 2017

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி மொழி அறிவிப்புப் பலகைகள் அகற்றம் கன்னட மொழி அமைப்பினரின் போராட்டம் வெற்றி

பெங்களூரு, ஆக. 5- கன்னட மொழிப்பற்றாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் பொறுத்தப்பட்டிருந்த இந்தி மொழி அறிவிப்பு பலகைகள் முற்றிலும் அகற்றப் பட்டன. தற்போது ரயில் நிலையங்களின் வெளியே உள்ள அறிவிப்பு மற்றும் விளம்பரப் பலகைகளும் தொடர்ந்து அகற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. 
மத்திய அரசின் மூன்று மொழி கொள்கைக்கு கன்னட அமைப்புகள் மற்றும் முதல்வர் சித்தராமையா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மெட்ரோ ரயில் நிலையங் களில் ஆங்கிலம், இந்தி, உள்ளூர் மொழி என 3 மொழி களில் அறிவிப்பு பலகைகள் வைக்கவேண்டும் என்ற கட்டாய உத்தரவை ஏற்க மறுத்தனர்.



இந்தி திணிப்பு

"இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் இந்தி மொழி அறிவிப்புகள் இடம் பெற வேண்டும்" என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
அரசியல் கட்சிகளும், கர்நாடக மேம்பாட்டு ஆணை யம், கன்னட அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தன. "எந்த அடிப்படையில் மத்திய அரசு இந்தியை 3ஆவது மொழியாக தேர்வு செய்தது. பெங்களூருவில் இந்தி மொழி பேசுபவர்களை விட தமிழ், பேசுபவர்கள் அதிகம் உள்ளனர்" என்று கேள்வி எழுப்பினர்.

தமிழ் - தெலுங்கு மக்கள் அதிகம்

இது தொடர்பாக முதல்வர் சித்தாராமையா கூறு கையில், "கருநாடகாவில் கன்னடர்களுக்கு அடுத்து தமிழ், தெலுங்கு, மக்கள் தான் அதிகம் உள்ளனர். தமிழை மூன்றாவது மொழியாக அறிவிக்காமல் மத்திய அரசு ஏன் இந்தியை அறிவித்தது. இரு மொழிக் கொள் கையில் தான் நம்பிக்கை உள்ளது. அது கன்னடம் மற் றும் ஆங்கிலம் மட்டுமே" என்றார்.

இது தொடர்பாக கடந்த 28ஆம் தேதி முதல்வர் சித்த ராமையா மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி யிருந்தார். அதில் "இந்தி மொழி இடம்பெற்றுள்ள அறி விப்பு பலகைகளை அகற்ற வேண்டும். கர்நாடகா மக்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்தி இல்லாத தற்காலிக அறிவிப்பு பலகைகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கருப்பு மைபூசி அழிப்பு

இதைதொடர்ந்து  கருநாடகா ரக்ஷனா வேதிக் அமைப் பினர் பெங்களூரு மெட்ரோ மற்றும் அதன் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்த இந்தி அறிவிப்பு பலகைகளில் கருப்பு மை பூசி இந்தி எழுத்துக்களை அழித்தனர்.  மேலும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதை கன்னடர்கள் தவிர்க்கவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
இவர்களின் பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் கிடைத் தது. கடந்த மாதம் குடியரசுத்தலைவர் பெங்களூரு மெட்ரோ ரயிலைத் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு நகரமக்களிடையே மெட்ரோ ரயிலிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தொடர்ந்து கன்னடர்கள் போராட்டம் நடத்தினர்.

மெட்ரோ ரயிலில் கூட்டம் குறைந்தது

மேலும் மெட்ரோ ரயில் பயணத்தை கன்னடர்கள் தவிர்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததனால் கடந்த ஜூலை இரண்டாம் வாரத்தில் இருந்து மெட்ரோ ரயில்களில் கூட்டம் குறைய ஆரம்பித்தது.

ஜூலை மாதம் இறுதியில் பெரும்பாலும் காலியா கவே சென்றன. இதனால் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நாளொன்றிற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்தி மொழியை அகற்றத் தொடங்கியுள்ளது, கன்னடர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தொடர் போராட்டம் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்த மூன்று மொழி அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
-விடுதலை,5.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக