பக்கங்கள்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சென்னை மெட்ரோவில் ஊடுருவி இருக்கும் இந்தி தமிழக அரசிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறிய மெட்ரோ நிறுவனம்

சென்னை ஆக. 7 பெங் களூரு மெட்ரோ ரயில் நிலை யங்களில் இந்தியில் வைக்கப் பட்டிருந்த அறிவிப்பு பலகை களை கன்னட மக்களின் ஒருங்கிணைந்த போராட்டம் காரணமாக அங்கிருந்த இந்தி பெயர் அகற்றப்பட்டது.

ஆனால் இருமொழிக் கொள்கை இருக்கும்  தமிழகத் தில் தற்போது இருக்கும் மெட்ரோ மற்றும் இனிவரும் காலத்தில் உருவாகும் மெட்ரோ ரெயில்களில் இருமொழிகள் (தமிழ், ஆங்கிலம்) பயன்படுத் தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்ட நிலையில்   சென்னை மெட்ரோ ரயில் நிலை யங்களில் இந்தியில் வைக்கப் பட்ட அறிவிப்பு பலகைகள் இடம் பெற்று வருகிறது

சென்னையில்  உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிக் கொள்கையில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் 2 மொழிக் கொள்கையே பெயர்ப் பலகையில் இடம் பெறும் என்று தமிழக அரசுக்கு உத்திர வாதம் எழுத்து மூலம் கொடுக் கப்பட்டுள்ளது, அதில் தனியார் விளம்பரங்கள் எந்த மொழியில் இருக்கலாம், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு பொதுவான அறிவிப்புகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

தமிழ் ஆர்வ லர்கள். ரயில் நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மட்டுமல்லாது ரயிலின் உள்ளே பயணக் குறிப்புகளில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மை யில், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளில் அழிக் கப்பட்டது, பெரிய பதாகைகள் அகற்றப்பட்டது. இந்த நிலை யில் இந்தி எதிர்ப்பு போராட் டத்திற்கு பெயர்போன தமிழ கத்தில் இந்தி அறிவிப்புகளுடன் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது தமிழ் மொழி ஆர்வலர்கள் மத் தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

-விடுதலை,7.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக