பக்கங்கள்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

சங்க கால மக்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு


சென்னை, பிப்.16   விழுப் புரம் மாவட்டம், ரிசிவந்தியம் பகுதியில், சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாள பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

தென்னக தொல்லியல் வர லாற்று ஆய்வு நடுவத் தலை வர், பிரியா கிருஷ்ணன், தொல் லியல் ஆர்வலர்கள், பழனி சாமி, கோவிந்தன், மாணவர் சுபாஷ் ஆகியோர், ரிசிவந்தியம் பகுதியில் கள ஆய்வு நடத் தினர். அப்போது, சங்க காலம், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய, அடை யாளப் பொருட்களை கண்டு பிடித்தனர். இது குறித்து, பிரியா கிருஷ்ணன் கூறியதா வது: ரிசிவந்தியம் விவசாயிகள், வயல்களை உழுத போது, கறுப்பு மற்றும் சிவப்பு நிற மண்பானை ஓடுகளை கண்டெடுத்து, வரப்பு பகுதி களில் குவித்திருந்தனர். அவை, சங்க காலத்தை சேர்ந்தவை.

அவற்றை ஆய்வு செய்த போது, இரண்டு ஓடுகளில், மேல்நோக்கிய இரண்டு அம் புக்குறிகள் இருப்பதை கண் டறிந்தோம். இந்த குறிகள், வெவ்வேறு இனக்குழுக்கள் கலந்ததற்கான அடையாளமாக இருக்கலாம்.

மேலும், அப்பகுதியில், இரும்பு உருக்கு ஆலைக்கு பயன்படுத்தும், ஊது குழலும் கிடைத்தது. அந்த மக்கள், இரும்பு உருக்கும் தொழில்நுட் பம் அறிந்திருந்தனர் என்பதை காட்டுகிறது. ரிசிவந்தியம், பாசார் பகுதியில், பெருங்கற் கால மக்களுக்கான, எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டுபிடித்தோம். அங்கு, முதுமக்கள் தாழிகள் வைக்கப் பட்ட ஈமக்காட்டையும், அதன் எதிரில், இறந்தோரைப் புதைத்து, அதைச் சுற்றி, சிறிதும், பெரிது மான எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டு பிடித்தோம்.

வரலாற்று சிறப்புமிக்க இப் பகுதிகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவ தோடு, இப்பகுதியில் ஆய்வு செய்ய, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-  விடுதலை நாளேடு,16.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக