பக்கங்கள்

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அவாள் பார்வையில் இன்னும் தமிழ் நீஷப்பாஷைதான்




மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காது காஞ்சிபுரம் ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி - தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்றார். தமிழ் என்றால் நீஷப் பாஷை என்ற சங்கர மடத்தின் - பார்ப்பனர்களின் துவேஷம் இந்த 2018 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது - சமூக வலைத்தளங்களில் இவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய தமிழர்கள் கிளர்ந்து எழுந்து விட்டனர்.

சென்னையில் நூல்களின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்ச¬யை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துகளை, பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டு ஆளுநரும் பங்கேற்ற அந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சங்கராச்சாரி பார்ப்பனர், தேசிய கீதத்தின்போது எழுந்து நின்றார். தமிழ் நீஷப் பாஷை என்பதுதானே காஞ்சி மடாதிபதிகளின் கருத்து - மறைந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி தமிழை நீஷப் பாஷை என்று சொன்னவர் அல்லவா!

பூஜை வேளையில் அவர் நீஷப் பாஷையில் (தமிழில்) பேசமாட்டாராம். அப்படி பேச நேர்ந்தால் ஸ்நானம் செய்து தீட்டுக் கழித்த பிறகுதான் பூஜையில் இறங்குவார்.

தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஆண்டாளின் பாடல் வரிக்கு தீய திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்னவரும் அவரே!

- விடுதலை ஞாயிறு மலர்,27.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக