பக்கங்கள்

சனி, 24 பிப்ரவரி, 2018

தமிழ் இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் ஆளுமை


இலக்கிய பரிசளிப்புவிழாவில் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் இமயம், அரசியல் இயக்கத்தை தொடங்கியவர்கள் எழுத்தாளர்கள்தான். மக்களுக்காக அவர் கள் எழுதினார்கள் என்று  குறிப்பிட்டார்.

இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனை யாளர் விருது பெற்ற எழுத்தாளர் இமயம் கூறுகையில், தமிழ் இலக்கியத்தை மக்களுக் குரியதாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும் என்று கூறியுள்ளார்.

திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்கள் முதலில் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் பங்கு பணிகளை எழுத்தாளர் களிலேயே அறிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே, அவர் களைப்போன்ற எழுத்தாளர்கள் தனி நபர்களை முன்னிறுத்தியே விமர்சித்து எழுதிவருகிறார்கள். சமூகத்தினுடனான உறவே அவரை எழுதுவதற்கு தள்ளியதாக திமுக நிறுவனர் அண்ணா குறிப்பிட்டு உள்ளார். இதுதான் அனைத்து எழுத்தாளர்க ளுக்கும் பொருந்தும்’’ என்றார்.

திராவிட இயக்கத்தில் இலக்கியங்கள் எழுத்தாளர்களால் மட்டுமே புகழ்பெறுவ தில்லை. எவ்வளவு பெரிய இலக்கியமாக இருந்தாலும், இலக்கியங்களில் உள்ள கருத்து சென்றடைய வேண்டுமானால் பிரச்சாரம் அவசியமாகும்.

எல்லா எழுத்துகளுமே பிரச்சாரங்கள் தான். நம்முடைய கருத்துகளை நாம் எழுத் துகள்வாயிலாக கூறுகிறோம். மற்றவர்கள் அதை கவனிக்கிறார்கள். இது பிரச்சாரம் இல்லையா? அதுபோலவே, திராவிட இயக் கத்தைப் பொறுத்தவரையில் எழுத்தாளர் கள் சமூக மற்றும் அரசியல் இயக்கமாக தொடங்கினார்கள்.

எழுத்துப்பணியில் முன்பு உள்ளடக் கமாக இருந்துவந்த பிற மொழிகளின்றி சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் வகை யில், அவர்கள்தான் புத்தகங்கள் மற்றும் செயல்பாடுகளின்மூலமாக கருத்துகள் பொதுமக்களை சென்றடையச் செய்தார் கள்’’ என்றார்.
ஜாதியின் அருவருப்புகளை தோலுரித்து, தாழ்த்தப்பட்டவர்களுக்காக இலக்கியப் பணிகளை ஆற்றிவருபவராவார் எழுத்தா ளர் இமயம்.

- எழுத்தாளர் இமயம்
தி இந்து ஆங்கிலம், 8.1.2018

- விடுதலை ஞாயிறு மலர், 3.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக