பக்கங்கள்

சனி, 24 பிப்ரவரி, 2018

பார்ப்பனர்கள் எப்படி?

அகில பாரத பிராமணர் சங்கத்தின் (ABBA)  மண்டல மாநாடு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் பார்ப்பனர்கள் நலன், மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தீர்வு என பல கோணங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

தென்இந்திய பார்ப்பனர்களின்

முக்கிய பிரச்சினைகள்

கடந்த 2016ஆம் ஆண்டு அம்பத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் திருமண இணையதளத்தை நடத்தி வருபவரான சுந்தரராஜன் என்பவர் பேசுகையில்,

“தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் பிராமண சமூக பெண்கள் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. இதனால் தென்இந்தியாவில் லட்சக்கணக்கான பிராமண ஆண்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர்.

இதற்காக பிராமணர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள வடமாநிலங்களான உத்திரப்பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிராமண அமைப்புடன் இணைந்து அதற்கான தீர்வுகான முயற்சி மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த செயல்பாட்டிற்கு கர்நாடகா மாநில மடத்தின் ஆசிர்வாதமும், இருப்பதால் இந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக எடுத்துவரும் இந்த முயற்சியால், 9 திருமணங்கள் இதுவரை நடந்துள்ளன. ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்று நினைக்கும் பெண்கள். இவர்கள் மிக சீக்கிரத்தில் தமிழை கற்றுக் கொள்வார்கள். உ.பி பிராமண சங்கம் மற்றும் கர்நாடக பிராமணர் சங்க சந்திப்பு நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்’’ என தெரிவித்தார். 
- சுதேசியின் குரல், டிசம்பர் 7, 2016

பார்ப்பனர்களில் பெண் கிடைக்கவில்லையாம், வருணாசிரமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற முடிவில் ஜாதியை, ஜாதி ஆதிக்கத்தைக் காத்திட துடிக்கின்ற பார்ப்பனர்களை அடையாளம் காண்பீர்.

பார்ப்பனர்களும் தமிழர்களே என்றும், இந்துக்கள் அனைவரும் ஒன்றுதான் என்றும் தவறாக எண்ணி கூறிவருவோர் சிந்திப்பார்களா?

- விடுதலை ஞாயிறு மலர், 3.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக