பக்கங்கள்

திங்கள், 5 பிப்ரவரி, 2018

சமற்கிருத திணிப்பு

சமற்கிருத திணிப்பு
உண்டா இல்லையா?

2011 குடி மதிப்பீட்டின்படி , இந்தியா முழுவதும் ,
வழக்கொழிந்த சமற்கிருத மொழியினைப் பேசுவோர் 14,346 பேர் !

இந்திய அரசு சமற்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கீடு /செலவு செய்த தொகை :

2014

சமற்கிருத வளர்ச்சிக்காக
பல்கலைக் கழகங்களுக்கு   170 கோடி
வழங்கப்பட்டது

2015

சமற்கிருத வாரம்
கொண்டாட             ......          . 470 கோடி

ஐக்கிய நாடுகள் சபையில்
இந்தியை அலுவல் மொழி
யாக்க்கும் நடைமுறைச்
செலவுகளுக்காக     ..     ....    270 கோடி

23.07.15

சமற்கிருத வாரத்திற்காக
C B S E  பள்ளிகளுக்கு
மனிதவளத் துறை ஒதுக்கீடு
செய்தது                                     320 கோடி

2015

ஐூலையில் பாங்காக்கில்
நடைபெற்ற சமற்கிருத
மாநாட்டிற்கு        ..                    200 கோடி

2016

ராஷ்டிரீய சமஸ்கிருத
சமஸ்தானுக்கு சமற்கிருத
வளர்ச்சிக்கு ஒதுக்கீடு              70 கோடி

                                          _________
                                            1500 கோடி
                                          __________

இதே காலகட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக  இந்தி அரசு ஒதுக்கீடு செய்த தொகை என்ன ?

தமிழர்களே சிந்திப்பீர் !
மையவரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினை உணர்வீர் !

" சமற்கிருதம் "

         தமிழ் தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தில் தோன்றி வளர்ச்சியடைந்தது. தமிழ் வடக்கிற் சென்று திவிடமாகத் திரிந்து. திரவிடமே வடமேற்காகச் சென்று ஐரோப்பாவின் வடமேற்கு மூலையை முட்டி ஆரியமாக மாறி , பின்பு தென்கிழக்காக வந்து கீழையாரியமாக இந்தியாவுக்குட் புகுந்து வழக்கற்றது. அவ் வழக்கற்ற ஆரியமும் அக்காலத்து வடஇந்திய வழக்குமொழியாகிய பிராகிருதமுங் கலந்தே வேத ஆரியம்.

அவ் வேத ஆரியமும் திரவிடமுந் தமிழுங கலந்ததே சமற்கிருதம்.இங்கனம் ஆரியமும் பிராகிருதமும் திரவிடமும் தமிழும் கலந்து ஒன்றாக்கப்பட்டதினாலேயே, வடமொழி ஸம்ஸ்க்ருத எனப்பட்டது.

க்ரு என்பது கரு என்னும் தென்சொல்லின் திரிபாம்.
கருத்தல் , செய்தல்,அவ்வினை இன்று வழக்கற்றது.கருவி,கருமம் என்னும் தென்சொற்களின் முதனிலை கரு என்பதே.சொன்முதல் உயிர்மெய்யின் உயிர்நீங்குதல் வடமொழி யியல்பாம்.

எ-டு : துருவு - த்ரு , பெருகு - ப்ருஹ் , திரு - ச்ரீ, மரி - ம்ரு.
இதனால் , தமிழே ஆரியத்திற்கு மூலமானதும் திருந்தியதும் பண்பட்டதும்ஆகும் என அறிந்துகொள்க.

சான்று: பக்கம் . 143
தென்சொற் கட்டுரைகள்
ஆசிரியர்:மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.
பதிப்பாசிரியர்: புலவர் அ நக்கீரன், தமிழ்மண் பதிப்பகம்
அகமது வணிக வளாகம்,
எண்.293, இராயப்பேட்டைநெடுஞ்சாலை , சென்னை 600 014.

" சமற்கிருதம் " வடமொழி முதலில் எழுதப்பட்ட கிரந்தவெழுத்து தமிழெழுத்தின் திரிபே . கிரந்தவெழுத்தின் திரிபு வளர்ச்சியே தேவநாகரி. அது கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அரும்பி , 8 ஆம் நூற்றாண்டிற் போதாகி , 11 ஆம் நூற்றாண்டில் மலர்ந்ததாக , மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத ஆங்கில அகரமுதலி முன்னுரையிற் குறிப்பிடுகின்றார். (ப. 28 , அடிக்குறிப்பு). தேவநாகரி என்னும் பெயரே , தேவன் ,நகரம் என்னும் இரு தென்சொற் கூட்டின் திரிபென்பதை அறிதல் வேண்டும். ப. 2 , முன்னுரை பண்டைத் தமிழக அரசு வரலாறு நூல்: மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பதிப்பாசிரியர்: புலவர் அ.நக்கீரன் வௌியீடு:கீழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை அகமது வணிக வளாகம் 293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை , இராயப்பேட்டை , சென்னை 600 014. __________________________________
இக்கால் இந்தியும் சமற்கிருதமும் தேவநாகரி வரிவடிவையே கைக்கொண்டுள்ளன என்பதை நினைவு கூர்க. தனக்கென சொந்த வரிவடிவமின்மையாலேயே சமற்கிருதம் வழக்கொழிந்தது என்பதையும் உணர்க.

எது முதலில் ? பிராகிருதமா ? சமற்கிருதமா ?

" மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய் பாட்டனையும் பெற்றான் ".

வேதகாலத்தை யடுத்துச் சமற்கிருதம் உருவாக்கப் பெற்றபோது , இந்திய வட்டார மொழிகளெல்லாம் , வடஇந்தியாவில் (மேற்கிலிருந்து கிழக்காய்ப்)
பைசாகி , சூரசேனி , மாகதி என்றும் நடுவிந்தியாவில் மராட்டிரி என்றும் , தென்னிந்தியாவில் திராவிடி என்றும் , ஐந்து பிராகிருத மொழிகள் கணக்கிடப்பெற்றன.
திராவிடி என்றது தமிழை . இதனால் திரவிடமொழிகளெல்லாம் அக்காலத்தில் தமிழுக்குள் அடக்கப் பெற்றமை அறியப்படும். பிராகிருதம் என்பவை சமற்கிருதத்திற்கு முன்னிருந்தவை அல்லது இயல்பாக முந்தித் தோன்றியவை. பிரா = முன் , கிருத = செய்யப்பட்டது . சமற்கிருதம் என்பது , வழக்கற்றுப்போன வேத ஆரியரின் முன்னோர் மொழியும் ஐம்பிராகிருதங்களும் கலந்தது . சம்(ஸம்) = உடன் , ஒருங்கு , ஒன்றாக கிருத(க்ருத)=செய்யப்பெற்றது ஸமம்க்ரு என்னும் அடை பெற்ற அல்லது கூட்டு முதனிலை ஸகரமெய் இடையிடப் பெற்று ஸம்ஸ்க்ரு என்றாயிற்று. க்ரு = செய் , ஸம்ஸ்க்ரு = ஒருங்குசேர் , ஒன்றாகச் செய் , இசை(to put together, join together, compose) - இ.வே. இதனால் ,பிராகிருதம் , சமற்கிரதம் என்பன உறவியற் சொற்கள்(Relative Terms) என்பதும்,பிராகிருத மொழிகள் சமற்கிருதத்திற்கு முந்தியவை என்பதும் பெறப்படும் . ஆயினும் , மேலையர் இன்றும் வடவரைக் குருட்டுத்தனமாய் நம்பி , " மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய்ப் பாட்டனையும் பெற்றனர் " என்னும் முறையில் , சமற்கிருதத்தினின்று பிராகிருதமும் பிராகிருதத்தினின்று திரவிடமும்(தென்மொழியும்) வந்தன வென்று கொண்டிருக்கின்றனர். இதற்குச் சென்னைப் பல்கலைகழகத் தமிழ் அகரமுதலியும் இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரின் தமிழ்ப்பற்றின்மையும் காட்டிக்கொடுப்பும் பெரிதுங் கரணியமாம். நடு இந்திய மொழிகளாகிய மராட்டியும் குசராத்தியும் பஞ்ச திரவிடக் கூறுகளாகக் கொள்ளப்பட்டிருந்தமை யாலும் , வடஇந்திய மொழியாகிய இந்தியின் அடிப்படை இன்றுந் தமிழா யிருப்பதாலும் ,மேலையாரிய மொழிகளிலும் தமிழ் சிறிதும் பெரிதும் கலந்திருப்பதனாலும் , வடஇந்தியப் பிராகிருதங்களும் மூவகைத் திரவிடங்களுள் * ஒன்றான வடதிரவிடத்தின் திரிபு வளர்ச்சியா யிருக்கலாம் என்று கருத இடமுண்டு. சமற்கிருதத்தில் ஐம்பிராகிருதமுங் கலந்திருப்பினும் , நேர்வழியாகவும் அல்வழியாகவும் ஐந்தில் இரு பகுதி யென்னுமளவு மிகுதியாகக் கலந்திருப்பது தமிழே என்பதை அறிதல் வேண்டும். சான்று : பக்கம் 2 - 3 (முற்படை) "இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ". ஆசிரியர்: மொழிஞாயிறு வேநேயப் பாவாணர் பதிப்பாசிரியர் : புலவர் அ.நக்கீரன் வௌியீடு:தமிழ்மண் பதிப்பகம் , சென்னை 600 014. 
___________________________________
பெறப்படுவது:
1.பிராகிருதம் , சமற்கிருதத்திற்கு முற்பட்டது.
2.தென் திரவிடியாகிய தமிழ் ஐம்பிராகிருதங்களுள் ஒன்று.
3.வட இந்திய மொழியாகிய இந்தியின் அடிப்படை இன்றும் தமிழே. 4.சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி தமிழே ! ஆகையால்தான் , சமற்கிரதமே இந்திய மொழிகள் அனைத்திலும் தொன்மையானது என்னும் வடவர்கூற்றை "மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய்ப் பாட்டனையும் பெற்றான் " என்பது !

- Arumugam A.pachaiyapan,(சீனிவாசன் பதிவில்,4.2.18) முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக