பக்கங்கள்

வியாழன், 22 பிப்ரவரி, 2018

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டில் நினைவில் கொள்ள வேண்டியவை


1. நமஸ்காரம், வணக்கம் ஆனது யாரால்?

2. வந்தனம், நன்றி ஆனது யாரால்?

3. அக்ரசானாதிபதி, தலைவர் ஆனது யாரால்?

4. காரியதரிசி, செயலாளர் ஆனது யாரால்?

5. விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை, திருமண அழைப்பிதழ் ஆனது யாரால்?

6. கிரகப்பிரவேசம், புதுமனை புகுவிழா ஆனது யாரால்?

7. சேமம், என்பது நலம் ஆனது யாரால்?

8. பஸ், பேருந்து ஆனது யாரால்?

9. ஆட்டோ, தானி ஆனது யாரால்?

10. லோக்சபா, மக்களவை ஆனது யாரால்?

11. ராஜ்யசபா, மாநிலங்களவை ஆனது யாரால்?

12. அபேட்சகர், வேட்பாளர் ஆனது யாரால்?

13. ஓட்டு, வாக்குரிமையானது யாரால்?

14. சட்டசபை, சட்டமன்றம் ஆனது யாரால்?

15. கவுன்சில் சபை, சட்ட மேலவை ஆனது யாரால்?

16. காரியாலயம், அலுவலகம் ஆனது யாரால்?

17. சாதம், சோறு ஆனது யாரால்?

18. போஜனம், சாப்பாடு ஆனது யாரால்?

19. திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் நாள் நாட்டில் நடைமுறைப்படுத்தி வருவது யாரால்?

20. சனாதிபதி, குடிரயரசுத்தலைவர் ஆனது யாரால்?

21. பிரதம மந்திரி தலைமை அமைச்சர் ஆனது யாரால்?

22. பஞ்சாயத்து, ஊராட்சி மன்றமாகவும், நகர சபை நகராட்சி மன்றமாகவும், மாநகர சபை மாநகராட்சி

மன்றமாகவும் ஆனது யாரால்?

23. அஞ்சலி, வணங்குகை, தொழுகை இவை நினைவேந்தல் ஆனது யாரால்?

24. ஆசீர்வாதம், வாழ்த்து ஆனது யாரால்?

26. பதவிப் பிரமாணம், பதவி உறுதிமொழி ஆனது யாரால்?

27. இரகசியக் காப்பு பிரமாணம், கமுக்க உறுதிமொழி ஆனது யாரால்?

28. பிரச்சாரம், பரப்புரை ஆனது யாரால்?

29. பிரசங்கம், சொற்பொழிவு ஆனது யாரால்?

30. பிரச்சினை, சிக்கல் உறழ்வு ஆனது யாரால்?

31. பிரசுரம், வெளியீடு ஆனது யாரால்?

32. பிரபஞ்சம், உலகம் ஆனது யாரால்?

33. பிரதிநிதி, நிகராளி, பகராளி ஆனது யாரால்?

34. ஜாமீன், பிணை ஆனது யாரால்?

35. ஆயுசு, வாழ்நாள், அகவை என்பவை ஆயுள் ஆனது யாரால்?

36. ஆரம்பம், தொடக்கம் ஆனது யாரால்?

37. அனுமதி, இசைவு ஆனது யாரால்?

38. அனுபவம், பட்டறிவு ஆனது யாரால்?

39. அவசரம், விரைவு இவை முடுக்கம் ஆனது யாரால்?

40. ஆச்சரியம், வியப்பு ஆனது யாரால்?

41. பத்திரிகை, தாளிகை ஆனது யாரால்?

42. நிருபர், செய்தியாளர் ஆனது யாரால்?

43. ஜெபம், வழிபாடு ஆனது யாரால்?

44. விஷயம், செய்தி ஆனது யாரால்?

45. கஷ்டம், துயரம் இவை வருத்தம் ஆனது யாரால்?

46. கஜானா, கருவூலம் ஆனது யாரால்?

47. குமாஸ்தா, எழுத்தர் ஆனது யாரால்?

48. குமாரன் என்பது குமரன், செல்வன் ஆனது யாரால்?

49. குமரி என்பது செல்வி ஆனது யாரால்?

50 ஜெயந்தி என்பது பிறந்த நாள் ஆனது யாரால்?

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரால், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரால், அரசியல் ஆசான் அறிஞர் அண்ணாவால், புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனால், பாவலரேறு பெருஞ்சித்திரனாரால், பாவாணரால், திராவிட இயக்கத்தால், தனித்தமிழ் இயக்கத்தால்; தமிழா எண்ணிப்பார்! “நன்றி மறப்பது நன்று அன்று?” என்பது வான்புகழ் வள்ளுவர் வாய்மொழி.)

- கல்பாக்கம் வ.வேம்பையன்
திருவள்ளுவர் மன்றம் - மறைமலை நகர்
- விடுதலை ஞாயிறு மலர், 10.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக