பக்கங்கள்

திங்கள், 23 மே, 2016

குமரிக்கண்டம் - சாத்தூர் சேகரன்


ஆய்வுக் கருத்து 17

தமிழ் வட்ட எழுத்தைப் பற்றி முதலில் கூறியவர்கள் _ இவை பிற்காலச் சோழர் (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு) எழுத்து என்றனர்.  பின்னர் பல்லவர் காலத்தில் (கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டு) உள்ள எழுத்து என்றனர்.  ஆனால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலும் வட்டெழுத்து உண்டு என்றனர் ஆழமாக ஆராய்ந்து பார்த்த சில அறிஞர்கள்.

இன்று கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் உள்ள தமிழ் பிரம்மி எழுத்துகளின் ஊடே சிற்சில எழுத்துகள் இருப்பதால், வட்ட எழுத்துகளின் பழைமை கி.மு. 5 ஆம் நூற்றாண்டிற்கும் முன்னே செல்கிறது.

ஆய்வுக் கருத்து 18 

தமிழ் வட்ட எழுத்து உலகில் 30_ க்கு மேற் பட்ட மொழிகளில் இருக்கிறது என்று அறியப்படும் பொழுது, வட்ட எழுத்தின் பழைமையும், பெருமையும் கூடுகிறது.

அண்டை அயல் மொழிகள்

சாவகம்        சிங்களம்
பர்மிய மொழி    ஆதிமலாய்

இந்திய மொழிகள்

தெலுங்கு        கன்னடம்
ஒரியா        பழைய மோடி மொழி
மலையாள எழுத்து    கிரந்த எழுத்து
பஞ்சாபி எழுத்து

பாதி வட்ட எழுத்து

தாய்லாந்து லாவோசு
வியட்நாம்    உருது
அரபி பெர்சியன்
இராக்கி    ஹிப்ரு
பினிசியன்    சிந்தி
காஷ்மீரி    தமிழ் பிரம்மி
வட இந்திய பிரம்மி    நகரி எழுத்து
திபெத்திய எழுத்து    பூட்டானிய எழுத்து
அசாமி எழுத்து    வங்காள எழுத்து

தொலைதூர மொழிகள்

கொரியா  ரோமானிய வட்டம்

ஆய்வுக் கருத்து 19

தமிழ் பிரம்மியில் இருந்து மட்டுமே வட இந்திய பிரம்மி கிளைத்து இருக்க முடியும் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம்.

ஆனால் சிந்துவெளி காலத்தின் பின் ஒழுங்கான உயிர்மெய் அட்டவணை ஏற்பட்டபின் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் இருந்த எழுத்து வகை எது என்ற கேள்வி பிறக்கிறது.  அது வட்ட எழுத்தா? அல்லது தமிழ் பிரம்மி எழுத்தா? ஒன்றுக்கொன்று என்ன உறவு?  இது அடுத்த கேள்வியாகும்.

சில ஒற்றுமைகளை இங்கே காண்போம்:
ஏற்கெனவே 30_க்கு மேற்பட்ட மொழிகளில் வட்ட எழுத்தின் ஆதிக்கம் இருப்பதாலும் தொலை தூர நாடுகளுக்குச் சென்றிருப்பதாலும் வட்ட எழுத்தின் காலம் கி.மு. 7000 மேல் எல்லையாகவும் கி.மு. 500 கீழ் எல்லையாகவும் இருந்திருக்கக் கூடும்.  மீண்டும் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக கி.மு. 300 முதல் கி.பி. 1000 வரை வளர்ந்திருக்க வேண்டும்.  கி.பி. 1000_த்துக்குப் பின் ஓரளவு கோடு சார்ந்த தமிழ் எழுத்தாகி இன்றைய தமிழ் எழுத்தாக மாறி இருக்க வேண்டும்.  கி.பி. 1000_த்துக்குப் பின்னரே இந்த தமிழ் எழுத்து வட இந்திய நகரி எழுத்தாக மலர்ந்திருக்கிறது.

ஆய்வுக் கருத்து 20

சிந்துவெளி எழுத்து _ வட்ட எழுத்து _ தமிழ் பிரம்மி ஆகிய மூன்று எழுத்து வகைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வோம்.
இந்த அட்டவணையைக் காணும்போது வட்ட எழுத்துகளில் இருந்தே தமிழ் பிரம்மி வந்திருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.

ஆய்வுக் கருத்து 21

ஓலையில் எழுதும்போது சில நுட்பங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. 

(1) ஓலையில் இருபுறமும் எழுதியதால் புள்ளி எழுத்திற்குப் புள்ளி இடவில்லை.  இதனால் பல கிளை மொழிகளில் தமிழ் சற்று மாறியுள்ளது. 

(2)  தமிழில் இட வலமாக எழுதிவர, மேற்கு ஆசிய பகுதி மக்கள் வட்ட எழுத்தை வலமாக எழுத முயன்றனர்.  இதனால் தமிழ் எழுத்துகளில் சில பாதி எழுத் தாகின.  சில வல மாற்றமோ, தலைகீழ் மாற்றமோ பெற்றன.

(3) தமிழில் உயிரெழுத்துகளுக்குத் தனி எழுத்து வகை இருந்து அவற்றையே இன்றுவரை எழுதி வருகிறோம்.  ஆனால் மேற்காசிய மக்கள் அ, இ, உ என்ற உயிரினை மட்டும் குறியீடுகளாக எழுத்தின் மேற்புறம் அல்லது கீழ்புறம் இடத் தொடங்கினர்.  இன்றும் அவற்றிற்குத் தனி உயிர் எழுத்து இல்லை.

(4) ஓலையில் நுண்ணிய நரம்புகள் நெடுவாக்கில் இருப்பதைக் காணலாம்.  எனவே ப என்று ஓலையில் எழுதினால் 11 இரண்டு கோடுகள் மட்டுமே தெளிவாகத் தெரியும்.  கிடைக்கோடு சரியாகத் தெரியாது.  மாறாக ஹி எனப் பகரத்தை வட்ட எழுத்தாக எழுதினால், பகரம் தெளிவாகத் தெரியும்.  எனவே ஆதி சிந்து வெளி எழுத்துகளை ஓலையில் எழுதத் தொடங்கிய போதே வட்ட எழுத்து முறை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆய்வுக் கருத்து 22

திருமந்திரத்தில் தமிழ் எழுத்துகள் 51 என வருகிறது.  இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் தமிழை 51 எழுத்துகள் ஆக்கும் முயற்சி நடை பெற்றது என்றும் அதன் பின்னரே தமிழில் இன்றும் இருந்து வரும் 30 உயிர்மெய் எழுத்துகள் வட இந்திய மொழிகளில் இன்றைய 51 எழுத்து வகை யாக மாறி இருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.

ஆய்வுக் கருத்து 23

(1)  வட இந்தியாவின் ஊர்ப் பெயர்கள் நூற்றுக்கு நூறு இன்றும் தமிழாகவே உள்ளன.  சில இடங்களில் திரிந்துள்ளன. 

(2) இவ்வாறே மக்கட் பெயரும் நூற்றுக்கு நூறு தமிழாகவே உள்ளன.  சில இடங்களில் திரிபு 40 சதவிகிதம் வரை இருக்கலாம். 

(3) எழுத்து முறையிலும் வட இந்திய பிரம்மி ஆனாலும் சரி, பின்னர் தோன்றிய நகரி முறை ஆனாலும் சரி இவையாவும் தமிழின் எழுத்து வகையில் இருந்து கிளைத்தனவே ஆகும்.

(4) சொற்கள் என்று வந்தால் யாவும் தமிழைச் சற்று திரித்தே தம் சொற்களை அமைத் துள்ளன.

(5) இலக்கண முறையும் தமிழ் இலக் கணத்தைச் சற்று மாற்றியோ, திரித்தோ அமைத் துள்ளன.

(6) சொற்றொடர் அமைப்பில் நூறு சதவிகித தமிழாகவே வடஇந்திய மொழிகள் உள்ளன.
நன்றி: முதற்சங்கு- - மார்ச் -  2011
-விடுதலை ஞா.ம.,7.5.11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக