பக்கங்கள்

வியாழன், 18 ஜனவரி, 2018

தமிழர்களின் மொழி சிறந்த மொழியாகும்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் முன்னேறுவதற்கு இயற்கையான தடை எதுவும் இல்லை. தமிழர்கள் வாழும் நாடு எல்லா நல்வளங்களையும் கொண்ட நாடாகும். தமிழர்களின் மொழி தமிழர் அல்லாதவர்களுடைய மொழிகளைவிடச் சிறந்த மொழியாகும். தமிழர்களின் இயற்கை அறிவுத் திறன் தமிழரல்லாத மற்ற மக்கள் பல்லோரையும் விட வளர்ச்சிக் கேற்ற நல்ல அறிவுத் திறன் ஆகும். ஆனால், உலகில் தமிழன் கீழ் மகனாகவும் அறி வாராய்ச்சி அற்ற மூடநம்பிக்கையுடைய காட்டுமிராண்டி யாகவும் இருந்து வருகின்றான்.

* தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்ற பிறகு, தமிழர்களை இழிவுபடுத்திக் கீழ் ஜாதி மக்களாக்கிய ஆரியர் சின்னங்களையும், ஆரியக் கடவுள்கள் என்பதான உருவங்களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த ரத்த ஓட்டமுள்ள தமிழன் கடமையாகும்.

* சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.
- விடுதலை நாளேடு, 30.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக