பக்கங்கள்

சனி, 27 ஜனவரி, 2018

தமிழ்த் தேசியம் சில விளக்கங்கள் சில வினாக்கள்




தமிழன் பரந்து விரிந்த நிலத்திற்குச்சொந்தக்காரன் என்றாலும் தற்போதுஅவன் எல்லை குமரிக்கும் திருத்தணிக்கும்குறுகிவிட்டது. அப்பகுதியைத் தமிழ்த்தேசியமாக நாம் வென்றெடுக்க வேண்டும்என்ற எண்ணம் பரவலாக எழுகிறது. அதுநியாயமான உணர்வு என்பதில் யாருக்கும்மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தேசியஒருமைப்பாடு என்ற உணர்வில் வளர்ந்தகாங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள்இதில் முரண்படலாம்.


சரி. அப்படிப்பட்ட தமிழ்த் தேசியம்எப்படிப்பட்டது? இதற்கு முதலில்வரையறை வேண்டும்.

தமிழ்த் தேசியத்தில் வாழும் தமிழர்கள் யார்என்பதற்கு என்ன வரையறை? ஆரியப்பார்ப்பனர்கள் தமிழ் பேசுவதால்அவர்களைத் தமிழர்கள் என்று தமிழ்த்தேசியம் ஏற்றுக் கொள்கின்றதா?

தமிழ்த் தேசியத்தில்மதநம்பிக்கையாளர்களுக்கு இடம் உண்டுஎன்பதை மறுக்க முடியாது. ஆனால்,அவர்கள் இந்துத்வா வாதிகளாய் இருந்து,தமிழர்களையே இஸ்லாமியர், கிறித்தவர்என்று பிரித்து, வெறுத்தால் அதற்குத் தீர்வுஎன்ன? அப்படிப்பட்ட இந்துத்வா தமிழர்கள்தமிழ்த் தேசியத்தில் ஏற்கப்படுவார்களா?விரட்டப்படுவார்களா? விரட்டவாய்ப்புள்ளதா?

மதம், கடவுள் என்பதை தனிப்பட்டநம்பிக்கையாகக் கொண்டு அதற்குச் சட்டசலுகையோ, பொது ஏற்பளிப்போ இல்லைஎன்பதை உறுதி செய்து,நடைமுறைப்படுத்த தமிழர்கள்ஒட்டுமொத்தமாக ஏற்க அவர்கள்பண்பாட்டு ரீதியாக, உளவியல் ரீதியாகப்பக்குவப்படுத்தப்பட்டுள்ளார்களா?பக்குவப்படுத்த திட்டங்கள் யாவை?

ஜாதி உணர்வுள்ள தமிழர்களைக்கொண்டு தமிழ்த் தேசியம் அமைக்கமுற்படும்போது, அந்த உணர்வுகள் அதைக்குலைத்து அழித்துவிடாதா? ஜாதியைஒழித்த பின்தான் தமிழ்த் தேசியம்என்பதும் சாத்தியம் இல்லைஎன்னும்போது, ஜாதி உணர்வாளர்குறித்துத் தமிழ்த் தேசியத்தின்நிலைப்பாடு என்ன?

பெண்ணுரிமை, பெண் விடுதலைகுறித்துத் தமிழ்த் தேசியவாதிகளுக்குத்தெளிவான கருத்தும், பார்வையும்,பக்குவமும் உண்டு என்பது அனைவரும்அறிந்ததுதான். ஆனால், தமிழ்த் தேசியம்அமைக்கும் முயற்சியில் இதைப் பற்றியதிட்டமிட்ட, தெளிவான கொள்கை முடிவுவகுக்கப்பட்டுள்ளதா? இதைச்செயல்படுத்த மக்கள்பக்குவப்படுத்தப்பட்டுள்ளனரா?

பெண்ணுரிமையில், பெண் விடுதலையில்மதம் குறுக்கிடும்போது, மதவிதிகளைமறுத்து மனிதநேய உரிமைகளைச்செயல்படுத்த, மதவாதிகளுடனானஅணுகுமுறை, தீர்வுகள் குறித்த தெளிவுஉள்ளதா? திட்டங்கள் எவை?

பொருளாதார அடிப்படையில் சமதர்மநோக்கில் பொதுவுடைமையா? கலப்புப்பொருளாதாரமா? முதலாளித்துவஅணுகுமுறையில் உலகமயமாதலில்கலந்துவிடுவதா? இதில் தமிழ்த்தேசியத்தின் கொள்கைகள் எவை?நிலைப்பாடுகள் யாவை?

மொழிக் கொள்கையில் தமிழ்த்தேசியத்தின் நிலை என்ன? குறிப்பாகத்தொடர்பு மொழி பற்றிய தெளிவு என்ன?

இந்தியாவிலிருந்து தமிழ்த் தேசியம்பிரிக்கப்படுமா? அல்லது. மத்திய அரசின்கட்டுக்குள் முழுச் சுதந்திரம் பெற்றபகுதியாகச் செயல்படுமா?

இந்தியாவிலிருந்து பிரித்துத் தமிழ்த்தேசியம் அமைக்கப்படும் எனின் அதைஅமைக்க என்ன செயல்திட்டம்! மக்களைத்திரட்டி, வாக்கெடுப்பின் அடிப்படையில்அய்.நா. மன்ற அங்கீகாரத்துடன் தமிழ்த்தேசியம் அமைப்பதா?

அல்லது தமிழ் மக்களை ஒன்று திரட்டி,போராடி, மத்திய அரசின் ஒப்புதலோடுபிரிந்து செல்வதா?

அல்லது ஆயுதப் போராட்டம் நடத்தி,இராவத்தை எதிர்கொண்டு உயிர்களைப்பலி கொடுத்து வெற்றியோ தோல்வியோமுயன்று பார்ப்பது என்ற செயல் திட்டமா?

உலகமயமாதலின் விளைவால் தனித்தேசியங்கள் அமைத்தல் என்னும்உளநிலை, உணர்வு நிலையில் பெருமளவுமாற்றங்கள் மக்களிடையே வந்துவிட்டநிலையில் தனித் தமிழ்த் தேசியம் என்றமுயற்சி நடைமுறைச் சாத்தியமா?

அல்லது உலக ஓட்டத்திற்கு ஏற்ப உலகேஒருநாடு, ஒரே ஆட்சி என்று உலகமக்களையே உடன்பிறப்பாகக் கொண்டுஉறவாகக் கொண்டு, உலக மக்கள்அனைவரும் ஒரே ஜோதியில் கலந்துவிடுவதா?

அப்படிப்பட்ட நோக்கில் இன்றைக்குக்கிராமப்புறங்களில் கூட, வேறு நாடு, வேறுஇனம், வேறு மொழியினரோடு மண உறவுகொள்ளும் மனபக்குவம், ஏற்பு நிலைஎளிதாகிவிட்ட நிலையில் அதற்கேற்பயாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நிலைஏற்பதா? உவகை ஒரு நாடாகப் பார்ப்பதா?

இது உன் பண்பாடு, இது என் பண்பாடுஎன்று பரம்பரைப் பண்பாட்டைப்பாதுகாக்க, செயல்படுத்த முனைவதைவிடஉலக மக்கள் முழுமைக்குமானகாலத்திற்கேற்ற கலாச்சாரங்களைக் கைக்கொள்வது அறிவுக்கு உகந்த செயலாகஇருக்குமா?

தமிழர் பண்பாடு, ஆரியர் பண்பாடு,அய்ரோப்பியர் பண்பாடு, சீனர் பண்பாடுஎன்பதெல்லாம், உலகு ஒரு நாடு என்றுசுருங்கி வரும் நிலையில் எதிர்காலத்தில்தாக்குப் பிடிக்குமா? நிலைக்குமா?

1500, 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் மதத்தலைவர்கள் உருவாக்கிய மார்க்கங்கள்எக்காலத்திற்கும் கட்டாயம்கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மதவழிநின்று வாழ நினைக்கும் மக்களுக்கு,மொழித் தேசியமும், உலக மயமாதலில்ஒரே கலாச்சாரம் அல்லது விரும்பியகலாச்சாரம் என்பது ஏற்புடையதல்லஎன்னும் நிலையில், எதிர்காலவாழ்வியலை, தேசியத்தை காலந்தான்தீர்மானிக்குமேயன்றி, நாம் கட்டமைக்கஅல்லது கட்டிக் காக்க நினைப்பவைசாத்தியப்படாது என்று நம் உள்ளத்தில்எழும் உணர்வை, கேள்வியை, யதார்த்தசூழலை ஒதுக்கித் தள்ளிவிட்டு,உணர்வுவயப்பட்ட நிலையில் தேசியப்பார்வையிலோ மதப் பார்வையிலோசெல்ல நினைப்பது அறிவுக்குஉகந்ததாகுமா?

எதிர்காலத்தில் மோதப் போகும் முடிவுகள்மூன்று. ஒன்று, மதக் கோட்பாடுகள்படியானவாழ்வு முறையைக் கட்டமைக்கமுயலுவோர்; இரண்டு, மொழிவழிதேசியத்தை உருவாக்க முயலுவோர்,மூன்று உலக மக்கள் எல்லாம் ஒன்று,மொழி என்பது கருத்துப் பரிமாற்றக் கருவி,மணவுறவும் இருப்பிடமும் உலகில் எங்கும்,எப்பகுதியிலும் நிகழலாம். உலகே ஒரேஆளுகையில் ஒரே நாடாக மாற வேண்டும்என்ற விருப்பம் உடையோர். இம்மூன்றும்போட்டியிடுவதை யாரும் தடுக்கவும்முடியாது, தவிர்க்கவும் முடியாது.இப்படிப்பட்ட அறிவியல் சார்ந்த உலகில்,உணர்வு சார்ந்த அடையாளங்களுக்காகஅவற்றைக் காக்க மனிதனைக் கட்டுக்குள்வைக்க முடியுமா? மனித உணர்வுகளைமரபு மற்றும் மத அடையாளங்களுக்கு,கோட்பாடுகளுக்குப் பலி கொடுக்கமுடியுமா? என்ற நடைமுறை சார்ந்தவினாக்களுக்கு விடை காணாமல்ஆளுக்கு ஒரு கொள்கையை எடுத்துக்கொண்டு மக்களை வதைப்பது, வளைப்பதுசரியா?

இன்றைய உலகில் எந்த ஒரு இனமும் தூயஇனம் அன்று. எல்லாம் கலவைஇனங்களே. அப்படிப்பட்ட நிலையில்மனிதன் என்ற பார்வையில் உலகோர்அனைவரையும் நோக்கினால் அதுதானேசரியாகும்? நடைமுறைக்கும்பகுத்தறிவிற்கும் காலத்திற்கும் ஏற்றகொள்கையை ஏற்பது, மற்றதை மறுப்பது,மறப்பது என்பதுதானே சரியாகும்?

உலக மக்களை ஆதிக்கம் செலுத்துவோர்செலுத்தப்படுவோர் என்று பிரித்துப்போரிடுவது, ஆதிக்கம் அழிப்பது, சமஉரிமை பெறுவது, தன்மானம் காப்பதுஎன்பது தானே சரியாகும்?

அப்படியாயின் ஆதிக்கம் இனவழியோ,மொழி வழியோ, மதவழியோ, சாத்திரவழியோ, பால்வழியோ, பொருளாதாரவழியோ, இராணுவ வழியோவரின்,அவற்றைத் தகர்ப்பதுதானேபுரட்சியாளர்களுக்கு அடையாளம்?

ஆக, இவற்றையெல்லாம் சிந்தித்து ஒருமுடிவுக்கு வராமல், இன ஆதிக்கத்தினின்றுதமிழர்களை மீட்ட ஒரு இயக்கத்தை, ஒருதலைவரைக் கொச்சைப்படுத்திக் குழப்பம்உண்டாக்குவதை, நன்றி மறப்பதைஎல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்அல்லவா? எனவே, ஆரியத்திடம்விழிப்போடிருந்து, ஆக்கபூர்வமாய், அறிவுப்பூர்வமாய் சிந்திப்போம், செயல்படுவோம்!காலத்திற்கேற்ப களம் காண்போம்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக