பக்கங்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பிழைஇன்றி எழுதுவீர்! (13)

இலக்கியப் போட்டி - 4


கட்டமை வில்லாக் காங்கிரஸ் கட்சிச்

சட்டமன் றுறுப்பின் தலைவர் ________

பைத்தியங் கொண்ட ________ ரான

வைத்திய நாதரின் வஞ்சச் சூழ்ச்சி

பலிக்க வில்லை! பச்சைத் திராவிடப்

________ வெற்றி போந்தது. வைத்திய

நாதர் கண்டார் நாண வில்லை.

தோதுறு திராவிடர், சுப்பரா யனையும்

தீமை யில்லாக் ________ ________

ஓமந் தூர்இ ராமசா மிக்குப்

________ ஆக்கப் பார்த்தார்

வகையிலாச் சூழ்ச்சியும் ________ ________

கோடிட்ட இடத்தில் ஏற்ற சொற்களை அமைக்க!

கட்டமை வில்லாக் காங்கிரஸ் கட்சிச்

சட்டமன் றுறுப்பின் தலைவர் தேர்தலில்

பைத்தியங் கொண்ட பார்ப்பன ரான

வைத்திய நாதரின் வஞ்சச் சூழ்ச்சி

பலிக்க வில்லை! பச்சைத் திராவிடப்

புலிக்கே வெற்றி போந்தது. வைத்திய

நாதர் கண்டார் நாண வில்லை.

தோதுறு திராவிடர், சுப்பரா யனையும்

தீமை யில்லாக் காமரா சரையும்

ஓமந் தூர்இ ராமசாமிக்குப்

பகைவர் ஆக்கப் பார்த்தார்

வகையிலாச் சூழ்ச்சியும் மண்ணா யிற்றே.

இலக்கியப் போட்டி - 5

எதுகை

‘முதலெழுத்து ஒன்றி வருவது மோனை’ என்பது முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது எதுகையைப் பற்றி அறிவிப்போம்,

எந்தப் பாவிற்கும் எதுகை அமைந்தி ருப்பது அழகும் சிறப்புமாகும்.

‘அண்ணல் காந்தியார் நுண்ணிய அறிவினர்’ என்பது அகவலடி, இதில் அண் ணல், நுண்ணிய என்பவற்றின் இரண்டாம் எழுத்தாக ண் என்பது ஒன்றி வந்துள்ளது.

இங்ஙனம் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதற்கே எதுகை என்று பெயர். “போந்த காந்தி ஈந்த உரிமை” என ஒரேயடியில் பல எதுகைவரின் மிகச் சிறப்பு.

‘காந்தி தமது கட்டுரை வழியே

மாந்தர் நடப்பது மாபெருஞ் சிறப்பு’

எனும் இரண்டடிகளின் முதலிலுள்ள காந்தியார், மாந்தர் என்பவற்றின் இரண் டாம் எழுத்தாக ‘ந்’ என்பது ஒன்றி வந்துள்ளது. இங்ஙனம் இரண்டு முதலிய பல அடிகளிலும் எதுகை ஒன்றி வரும். அடிதோறும் ஒன்றிவரின் மிக மிகச் சிறப்பு.

‘வடவரின் வருகையால் வண்டமிழ் மக்களின்

நடைமுறை மாற்றம் நண்ணிய திங்கே’

இதில் வட, நடை என இரண்டாம் எழுத்தாக, ட, டை என்னும் டகர வரிசை ஒன்றி வந்துள்ளது. இங்ஙனம் ட, டா, டி, டீ - ம, மா, மி, மீ என வரும் ஒரு வரிசை எழுத்துக்குள்ளேயே எதுவும் வந்து ஒன்றலாம். இதற்கு ‘வருக்க எதுகை’ என்று பெயர்.

‘நுண்ணிய ஆரியம் நலிவு செய்ததால்

மன்னிய நந்தமிழ் மாண்பு குறைந்தது’

இதில் நண், மண் என இரண்டாம் எழுத்தாக ண், ன் என்னும் மெல்லின எழுத் துக்கள் ஒன்றி வந்துள்ளன. இங்ஙனம் வெவ்வேறு மெல்லின எழுத்துக்களோ அல்லது வெவ்வேறு வல்லின எழுத்துக்களோ, வெவ்வேறு இடையின எழுத்துக்களோ தம்முள் ஒன்றி வருதலும் உண்டு. இதற்கு ‘இன எதுகை’ என்று பெயர்.

மேலும் ‘பாட்டு’ என்பதற்கு எதுகையாகக் ‘கட்டு’ என வருதல் கூடாது. காட்டு எனவே வரவேண்டும். இம் முறையில் எதுகைய மைத்துக் கீழ்வரும் ஆசிரியப்பாவில் கோடிட்ட இடங்களை நிறைக்க.

இந்திவேண்டாம்! வித்வான் ________ சண்முகன்

ஆரியம் வந்தது! ஆங்கிலம் வந்தது!

________ நந்தமிழ் நிலைமை குறைந்தது

கோயிலில் ஆரியர் ________ புக்கனர்

________ மணத்திலும் துன்னினர் அவரே!

வழுத்தும் தமிழின் ________ குன்ற

எழுத்திலும் பேச்சிலும் ________ பிறமொழி

________ ஆண்டதால் அலுவல் களிலெலாம்

நுண்ணிய தாங்கில நாட்டு மொழியே

________ ________ இதேநிலை!

வந்து காப்பீர் வளர்திரா விடரே!

இந்திவேண்டாம்! வித்வான் சுந்தர சண்முகன்

ஆரியம் வந்தது! ஆங்கிலம் வந்தது!

நேரிய நந்தமிழ் நிலைமை குலைந்தது

கோயிலில் ஆரியர் வாயிலாய்ப் புக்கனர்

தூய மணத்திலும் துன்னினர் அவரே!

வழுத்தும் தமிழின் வளப்பம் குன்ற

எழுத்திலும் பேச்சிலும் நுழைத்தனர் பிறமொழி

அன்னியர் ஆண்டதால் அலுவல் களிலெலாம்

நுண்ணிய தாங்கில நாட்டு மொழியே

இந்திவந் தாலும் இதேநிலை!

வந்து காப்பீர் வளர்திரா விடரே!

(நிறைவு)


- விடுதலை ஞாயிறு மலர், 1.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக