பக்கங்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2018

தமிழ் போராளி இலக்குவனார்


செப்டம்பர் 3ஆம் தேதி) இலக்குவனார் நினைவு தினம்



பேராசிரியர் சி.இலக்குவனார் தமி ழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையா னவர்.


தான் படித்த படிப்பை, சம்பாத்தியம் - குடும்பம் - வளமைக்கு மட்டுமே என் னும் கண்ணோட்டம் மட்டுமே அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது.


இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் - இரத்தினம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல் மற்றும் முதுகலை பட்டங் களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்துறை போகியவர் ஆவார்.


‘தமிழர் தலைவர்' நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணாக்கர் ஆவார்.


தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதா ரணமானது. முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் போப்பைச் சந்தித்த போதும், யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போதும், அந்நூலை நினைவுப் பரிசாக அளித்தார்.


எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள்.


திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம்  - தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும்.


தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்கள் வாழும்வரை பேராசிரியர் இலக்குவனார் அவர்களும் நாட்டு மக்களின் இதயங்களில் கோல லோச்சுவார்.


சங்க இலக்கியம், குறள் நெறி, திரா விடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.


இவற்றையெல்லாம் அவர் நடத்தி னார் என்றாலும் பொருளாதாரக் கண் ணோட்டத்தில், தன் கையைச் சுட்டுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.


ஆனாலும் இனம், மொழி மேம்பாட் டுக்கான மேட்டிமை அவரை ஆட் கொண்டது.


அவர் தமிழாசிரியராக, விரிவுரையா ளராக, பேராசிரியராக, துறைத்தலைவரா கப் பரிணமித்தவர்.


திருவாரூரில் தமிழாசிரியராய் பணி யாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி (பிற்காலத் தில் முதல் அமைச்சர் கலைஞர்)




தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக் குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி' நூலில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.


திருவாரூரிலிருந்து தொடங்கி குல சேகரன்பட்டினம், நெல்லை ம.தி.தா இந்துக்கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, ஈரோடு மகாஜனக் கல்லூரி (தந்தை பெரியாரின் சிபாரிசின் பேரில்), மதுரை தியாகராயர் கல்லூரி, நாகர் கோயில், சென்னை மாநிலக் கல் லூரி, ஆந்திராவின் உஸ்மானிய பல் கலைக்கழகம் வரை (1936 - 1968 இடை வெளியில்) பந்தாடப்பட்டவர்.


அந்த வகையில் தமிழ்நாட்டின் மண்ணை அளந்த மணவாளர் அவர்! என்ன கார ணம்?


பணியில் தொய்வா? திறமைக் குறைவா? அல்ல அல்ல. சென்ற இடங்களில் எல் லாம் அவர் வகித்த துறையில் முத்திரை பதித்தவர் - தமிழ் உணர்வோடு மாண வர்களை வார்த்தெடுத்தவர். அவருடைய மாணவர்களுள் ஒருவர்தான் தோழர் ஆர்.நல்லகண்ணு; பின் ஏனிந்தப் பந்தாட் டம்? அவர் தமிழ் உணர்வாளர், இன உணர்வாளர், தந்தை பெரியார் வழி சுய மரியாதைக்காரர் - இவைதான் இவர் மீது ஏவப்பட்ட அம்புகள்.


ஒரு கல்லூரியிலிருந்து அவர் வெளி யேற்றப்பட்டதற்கு சொல்லப்பட்ட கார ணம் தெரியுமா?


பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட் டிலும், இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் பங்கு கொண்டார். இலக்குவனார் கருஞ்சட்டை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வரு கிறார் என்று பொதுக்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழுவுக்கு தாக்கீது - ஆட்சி மன் றக்குழுவின் கருத்து இதற்கு எதிராக இருந்தாலும் வேறு வழியின்றி இலக்கு வனாரை வெளியேற்ற நேர்ந்தது.


அந்த கல்லூரியில் அவருக்கு இழைத்த அநீதி கண்டு ‘துரத்தப்பட்டேன்' என்று கவிதை வரிகளில் குமுறினார்!


கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாட மிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென் னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழு வின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர்க்குழு செயலாளராகவும் பொறுப் பேற்று செயப்பேரிகை கொட்டியவர்.


இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசமும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தனிமைச் சிறையும் பதவி இழப்பும் தான் அவர் பெற்ற பரிசுகள்.


தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத் திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியா கவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.


பணிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் திமுக பிரிந்தபோது தந்தை பெரியார் மேற் கொண்ட நீண்ட சுற்றுப்பயணம் முழுவதி லும் திராவிடர் கழக கூட்டங்களில் இலக் குவனாரும் அவருடன் பயணித்து உரை யாற்றினார்.


புதுக்கோட்டையில் நடைபெற்ற திரா விடர் கழக மாநாட்டில் (9.4.1950) புலவர் இலக்குவனார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.


"ஆரியத்தை முதலாவது எதிர்த்த புரட்சிப் புலவர் திருவள்ளுவர். மக்களின் வாழ்வுக்கேற்ற அறம், பொருள், இல்லறம் பற்றித்தான் வள்ளுவர் எழுதினாரே ஒழிய, ஆரியக் கருத்துப்படி இருக்கும் வீட்டைப்பற்றி (மோட்சம் பற்றி) எழுத வில்லை" என்று பேசினார்.


இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.


தன்மானப் புலவர் பேராசிரியர் இலக் குவனாருக்கு ஆறு மகன்களும். அய்ந்து மகள்களும் உண்டு.


‘தமிழகத்தின் உரிமை உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப் பதே எனது உறு கடனாம் என்று உறுதி கொள்ளச்செய்தது; தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இதுவே யாகும்' - இதுவே இலக்குவனார் இலக்கு.


அந்தத் தமிழ்ச்சிங்கம் 3.9.1973 இல் கண் மூடிற்று.


என்றாலும் வரலாற்றில் வாழுகிறது!


- நன்றி, 'தினத்தந்தி', 2.9.2018

- விடுதலை நாளேடு, 2.9.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக