பக்கங்கள்

புதன், 12 செப்டம்பர், 2018

பிழைஇன்றி எழுதுவீர்! -12

கேள்வி - 1


தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் இவைகள் போன்ற சொற்களைக் கொண்டு அகவல் எழுத வேண்டும். இவற்றிற்கு ஈரசைச் சொற்கள் என்று பெயர்.

இந்த ஈரசைச் சொற்கள் நான்கு கொண்டது. அகவலின் ஓர் அடி. அப்படி எத்தனை அடிகள் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் கடைசி அடி (வந்தே, வாழ் கவே, எனஏ) என்று முடிய வேண்டும். அன்றியும் ஈற்றடிக்கு முன் அடியில் மூன்று ஈரசைச் சொற்கள் மட்டும் இருக்க வேண்டும்.

நம்பி வந்தான் தந்தையார் வந்தனர்

செம்பு நிறையத் தேன்கொ ணர்ந்தார்

தினைமா வோடு சேர்த்தோம்

அனைவரும் உண்டோம் அகம கிழ்ந்தே .

- இது நேரிசை அகவற்பா.

தேமா போன்ற ஈரசைச் சொற்கள்:-

தேர்பார், தென்பால், போனாய் முதலியவை.

புளிமா போன்ற ஈரசைச் சொற்கள்:-

புதுத்தேர், நுணாக்காய், வராரோ முதலியவை

கூவிளம் போன்ற ஈரசைச் சொற்கள்:-

பார் அவர், என் அவா, ஏன்நடார் முதலியவை.

கருவிளம் போன்ற ஈரசைச் சொற்கள்:-

கடற்புனல், கடாநிறை, அடாதடா முதலியவை.

மேற்சொன்ன நேரிசை அகவற்பாவில் உள்ள ஒவ்வொரு ஈரசைச் சொற்களுக்கும், கீழே ஏற்ற தேமா முதலியவை களை எழுத வேண்டும்.

(தம்பி                வந்தான்         தந்தையார்   வந்தனர்.

தேமா                தேமா                கூவிளம்        கூவிளம்)

செம்பு                நிறையத்       தேன்கொ       ணர்ந்தான்

___        புளிமா              தேமா                  தேமா

தினைமா       வோடு              சேர்த்தோம்

___        ___        தேமா

அனைவரும்              உண்டோம்  அகம கிழ்ந்தே

___        ___        புளிமா              தேமா

விட்ட இடத்தை நிறைவு செய்க.

கேள்வி - 2

தந்தை

சாதி என்பதைத் தகர்க்க _______

தேமா

மதம் எனும் நினைவே _______ வேண்டும்

தேமா

இவைகள் இருக்கும் _______

புளிமா

எவர் பொதுத் தொண்டும் ____ இலையே

கருவிளம்

இந்த நேரிசை அகவற்பாவில் கோட்டுக்கு மேல் ஏற்ற சொல் அமைக்க.

கேள்வி - 3

தந்தை

தூயார் _______ சூட்டுக் கொன்ற “கை”

கூவிளம்

_______ மனிதனின் _______ அன்று

தேமா                         தேமா

மதமெனும் _______ வலக்கை

தேமா

அதனால் _______ _______ கடனே

புளிமா      புளிமா

கோட்டின் மேல் ஏற்ற சொல்லை எழுதுக.

தேர்தல் பெற்ற முதல் மூன்று வகையார்க்கும் முறையே 100க்கு 50, 100க்கு 30, 100க்கு 20 எனச் சேரும் தொகை பிரிக்கப்படும்.

முன்பு நாம் காட்டிய நேரிசை யாசிரியப் பாவைக் கண்டீர்கள். ஆசிரியப்பா என்பதும் அகவற்பா என்பதும் ஒன்றே. நேரிசை ஆசிரியப்பா அல்லது நேரிசை அகவற்பா என்பதும் என்னவெனில், கடைசி அடிக்கு முதலடி முச்சீராய் வருவது.

இனி, அகவற் பாவுக்கோ மற்றும் எந்தப் பாவுக்கோ, மோனை என்பது கருதப்பட வேண்டும்.

‘அண்ணல் காந்தியை அழித்தான் தீயோன்’

என்பது அகவலடி. இதில் மோனை என்பது என்னவெனில் - அண்ணல் என்பதிலுள்ள ‘அ’ என்ற எழுத்துக்கு மோனையாக அழித்தான் என்பதிலுள்ள ‘அ’ வந்தது.

‘அண்ணல் காந்தியார் ஆய்ந்து ணர்ந்தவர்’

இந்த அடியில், முதற்சீர் ‘அ’வுக்கு மூன்றாஞ்சீர் ‘ஆ’ மோனையாக அமைந்தது.

‘அண்ணல் காந்தியார் ஐயம் அகன்றவர்’

இந்த அடியில் முதற்சீர் ‘அ’வுக்கு மூன்றாஞ்சீர் ‘ஐ’ மோனையாக வந்துள்ளது.

‘அண்ணல் காந்தியார் ஔவியங் கொள்ளார்’

இந்த அடியில் முதற்சீர் ‘அ’வுக்கு மூன்றாஞ்சீர் ‘ஔ’ மோனையாக வந்துள்ளது.

எனவே, ஒவ்வோரடியிலும் முதற்சீர் ‘அ’வில் தொடங்கினால் மூன்றாஞ் சீரில் அதற்கு மோனையாக அ, ஆ, ஐ, ஔ உடைய சொற்களில் ஒன்று வர வேண்டும். முதற் சீருக்கு மூன்றாம் சீரில்தான் மோனை அமைய வேண்டும் என்பது சிறப்பு. இரண்டாஞ் சீரிலும் நான்காஞ் சீரிலும்கூட மோனை வைக்கலாம்.

கீழே, இன்னின்ன எழுத்துக்களுக்கு இன்னின்ன எழுத்துக்கள் மோனை என்பது குறிப்பிடப்படுகிறது.

எழுத்து            மோனைகள்               எழுத்து

மோனைகள்

அ - அ                 ஆ, ஐ, ஔ     ஊ - உ                ஊ, ஒ, ஓ

ஆ - அ                ஆ, ஐ, ஔ     ஒ - உ                 ஊ, ஒ, ஓ

ஐ - அ ஆ, ஐ, ஒள்     ஓ - உ                 ஊ, ஒ, ஓ

ஔ - அ            ஆ, ஐ, ஔ     ச - ச     த

இ - இ ஈ, எ, ஏ               த - ச    த

எ - இ   ஈ, எ, ஏ               ஞ - ஞ                ந

ஏ - இ   ஈ, எ, ஏ               ந - ஞ ந

உ - உ ஊ, ஒ, ஓ         ம - ம வ

வ - ம  வ

மற்ற உயிர்மெய் எழுத்துக்களுக்கெல் லாம் உயிர் எழுத்துக்களுக்குச் சொன்ன படியே.

கீழ்வரும் செய்யுளில், கோடிட்ட இடங்களை ஏற்ற சொல்லால் நிறைவு செய்க.

“காந்தியைக் கொன்றவன் ________ வழியே.

சாய்ந்திடு கின்றனர் ________ யாவரும்

என்று நடுங்க ________ திராவிடர்

வன்மனங் கொண்ட ________ நாதரின்

குதிப்பால் எம்திறல் குறையா ________

கொதிப்பால் இயக்கம் ________ அன்றோ

சேய்மையில் இல்லை ________ வெற்றி

அண்மையில் என்று ________

திண்மையில் முழங்குக ________ திடவே”.

 

“காந்தியைக் கொன்றவன் கருத்தின் வழியே.

சாய்ந்திடு கின்றனர் தலைவர் யாவரும்

என்று நடுங்க வில்லை திராவிடர்

வன்மனங் கொண்ட வைத்திய நாதரின்

குதிப்பால் எம்திறல் குறையா துள்ளக்

கொதிப்பால் இயக்கம் கொழுக்கும் அன்றோ

சேய்மையில் இல்லை திராவிடர் வெற்றி

அண்மையில் என்று முரசே

திண்மையில் முழங்குக திசையதிர்ந் திடவே”.

- ‘குயில்’ சென்னை

(தொடரும்)

- விடுதலை ஞா.ம., 25.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக