பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வாழமங்கலத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு


புதுக்கோட்டை, ஆக.27 புதுக் கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வாழமங்கலம் கிராமத்தில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காணிக்காவல் ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் தெரிவித்திருப்பது:
புதுக்கோட்டை மாவட்டத் தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழர்களும் இறுதிப்பகுதியில் பாண்டியர் களும் ஆட்சிபுரிந்தனர். படிப் படியாக நிலையான ஒருங் கிணைந்த ஆட்சிமுறை மறை யத் தொடங்கியது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் அதிக நிலம் படைத்தவர்கள் அவ்வூரின் குறுநில மன்னர் களாக மாறினர்.
அவர்களே முறைப்படுத்திக் கொள்ளும் வகையில் வரி செலுத்தி பாடிகாவலை நிய மித்து வந்துள்ளது புதுக் கோட்டை சமஸ்தான கல்வெட் டுகள் மூலம் அறிய முடிகிறது, பாடி காவலுக்கு விளையும் பொருட்களின் அடிப்படையில் கோல் அளவீட்டு முறையில் நிதி பெறப்பட்டுள்ளது. நில மில்லாதவர்களிடம் ஆடு, மாடு மற்றும் கோழி, இறைச்சி, நெய், பால் அல்லது அதற்கு இணையான நிதி, கடமை என்ற பெயரில் வழங்குவது நடைமுறையில் இருந்துள்ளது. பிற்பகுதியில் கிராம பாடிகா வல் புரிவோர் குளம் வெட் டுதல், பாசனத்தை முறைப் படுத்தி வழங்குதல், கோயில் நிர்வாகம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் உரிமை பெற்றனர்.
கீழைக்குறிச்சியை (தற்பொ ழுது கீழக்குறிச்சி என்று அழைக்கப்படுகிற) சேர்ந்த வர்கள் பாடிக்காவல் புரிந்ததை யும் கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுவை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததை யும் இச்செயலுக்காக பயன டைந்த கிராமத்தவரால் பாடி காவல் குழுவுக்கு விருந்து வழங் கப்பட்டதையும் புதுக் கோட்டை சமஸ்தான கல்வெட் டுகளான 688 மற்றும் 691 கூறுகிறது.
கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல்காத்து வரு வதைத் தெரியப்படுத்தும் வகை யில் கல்வெட்டினை ஊரின் எல்லையிலோ, வயல்களிலோ, ஊரின் மத்தியிலோ, கோயி லுக்கு அருகிலோ, பாடிகாவல் புரியும் நிலப்பகுதியிலோ நட்டு வைத்திருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஊரின் வரி வசூல் உள்ளிட்ட உரிமைகளை வெளிப் படுத்தும் கல்வெட்டே ஆசிரி யம் கல்வெட்டு எனப்படுகிறது. “ஸ்வஸ்தி ஸ்ரீ வட சிறுவாயி நாட்டு வாளுவமங்கலம் பகைத் தலைப்பாடியான கீழைக்குறிச் சியார் ஆசிரியம் விசையஞ்சாநல்லூர்’’ என்று கல் வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது வாழ மங்கலம் என்று அழைக்கப் படும் இவ்வூர் வடசிறுவாயி நாடு என்ற சோழ மன்னர்களால் பெயரிடப்பட்ட குறுநில நாட் டின் ஒருபகுதியாக இருந்துள் ளது. பின்னர் வாளுவமங்கலம் என்ற பெயரோடு வழங்கப் பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இவ் வூரை கீழைக்குறிச்சியார் என்ற ஊர்ப்பெயரோடு அழைக்கப் பட்ட பாடிக்காவல் தலைவ னின் கட்டுப்பாட்டில் இவ்வூர் வந்ததையும்,
இவ்வூரின் பெயரை விசையஞ்சான் அல்லது விசையன் அஞ்சாதவன் என்ற பொருள்படும்படி தனது பெயரின் முன்னொற்றோடு விசையஞ்சாநல்லூர் என்று கல்வெட்டு நாட்டியிருப்பதும் தெரிகிறது. தற்போது வரை வாழமங்கலத்தில் வசிக்கும் குறிப்பிட்ட இனத்தவரின் உற வினர்கள் கீழைக்குறிச்சி கிரா மத்தினரோடு உறவு பேணி வருவதை இவ்வூரில் வசிப்ப வர்கள் அளித்த தகவல்கள் உறுதி செய்கின்றன என மணி கண்டன் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,27.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக