பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

போடியில் கற்திட்டைகள் கண்டுபிடிப்பு 2,500 ஆண்டு பழைமையானவை


போடி, ஜூலை 14 போடி அருகே அணைக்கரைப்பட்டி மரக்காமலை மலைப்பகுதியில் 2,500 ஆண்டு களுக்கு முந்தைய கற்திட்டைகள் எனப்படும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம், போடி சி.பி.ஏ., கல்லுரி வரலாற்றுத் துறையின் கீழ் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மய்யத்தின் மூலம் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் பேராசிரியர்கள் ஞானசேகரன், மாணிக்க ராஜ், கபேஷ், கருப்பசாமி , அணைக் கரைப்பட்டி அருகே மரக்கா மலை சுற்றுப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவு குறித்து தொல் லியல் ஆய்வாளர் மாணிக்கராஜ் கூறுகையில்: தமிழகத்தில் அரிதாக கிடைக்கக் கூடிய 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற் திட்டைகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இப்பகு தியினர் இதனை பாண்டியர் திட்டு, பாண்டியர் குகை, பாண்டியர் வீடு என பாண்டிய மன்னர்களோடும், பாண்டவர் களோடும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். கற்திட்டை என் பது பெருங்கற்காலத்தை சேர்ந்த ஈமப்புதை குழி அல்லது கல் லறையாகும். பெருங்கற்காலத் தில் மலைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல் களை அடக்கம் செய்ய சிறிய, பெரிய பாறை கற்களை வட்ட மாகவோ, சதுரமாகவோ அடுக்கி, மய்யப்பகுதியில் உடலோடு, ஈமப்பொருட்கள் (இறுதிச் சடங்கு பொருட்கள்), அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து, நான்கு புறமும் கற் பலகைகளை செங்குத்தாக நிறுத்தி மேல்பகுதியில் பலகை கற்களை கொண்டு மூடிவிடு வர். ஒரு புறம் மட்டும் நுழைவு வாயில் போன்று உள்ள அமைப்பு கற்திட்டையாகும். இது போன்று நான்கு கற்திட் டைகள் ஒரே இடத்தில் காணப் படுகின்றன.
மூன்று கற்திட்டைகள் சேதம் அடைந்துள்ளன. இவை 4 அடி நீளமும், 3 அடி அகல மும் கொண்டுள்ளன. மழை, காற்று, மனிதர்கள், விலங்குக ளிடம் இருந்து உடல்களை பாதுகாக்க 8 அடி அகலத்தில் கற்கள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை எதிரிகளுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்த நான்கு வீரர்களுக்காகவோ அல்லது சமூகத்தின் தலைவர் இறந்த பின் அவர் நினைவாகவோ அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பெருங்கற் கால கற்திட்டையாக அமைந் துள்ளதால் இப்பகுதியில் மக் கள் வாழ்ந்துள்ளதும், அவர்களது கட்டடக் கலை, கட்டுமான நாக ரிகத்தையும் வெளிக் காட்டி தேனி மாவட்டத்தின் வரலாற்று சான்றாகவும் இவை உள்ளன.
-விடுதலை,14.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக