பக்கங்கள்

சனி, 22 அக்டோபர், 2016

3,500 ஆண்டுகள் முந்தைய பானைக் குறியீடுகள் கண்டெடுப்பு


புதுக்கோட்டை, அக்.22 புதுக் கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வில்லுனி ஆற்றங்கரையில் எழுத்துகள் தோன்றுவதற்கு முந் தைய பழைமையான பானைக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.
இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணி கண்டன் கூறியதாவது:
வில்லுனி ஆற்றங்கரையில், ராமசாமிபுரம் மங்கலநாடு ஆகிய ஊர்களின் கிராம எல் லையில் 173 ஏக்கரில் இத்திடல் முட்புதர் காடாக உள்ளது.
சுண்ணாம்பு கூட்டுக் கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப் பகுதிகளில் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே கருப்பு சிவப்பு பானை ஓடுகள் பரவிக் கிடக் கின்றன.
இத்துடன் உலோக உருக்குக் கழிவுகளும், உலோக வார்ப்பு மண் உருளைகளும், கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகின்றன.
பானைக் குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த் திறன்மிக்கவர் புதைக் கப்பட்டுள்ளார் என்பதைக் குறிப்பது என்பதே கிரேக்கத் தொல்லியலாளர்கள் கருத்து. இந்திய தொல்லியலாளர்கள் பலர் இந்தக் குறியீட்டை மட் பாண்டம் செய்பவரின் அடை யாளம் என்று கூறிவரும் நிலை யில், இதுபோன்ற குறியீடுகள் இலங்கை, கிரேக்கம், இந்தியா வின் பெருவாரியான பகுதியில் கிடைத்துள்ளதைக் கொண்டும், இதை உலகலாவிய மொழிக் குறியீடாகவே பார்க்க வேண்டி யுள்ளது.
மேலும், மண் அடுக்கை மட்டுமே வைத்து இதுபோன்ற குறியீடுகளின் காலக் கணிப்பை வெளியிடுவதும் சரியானதாக அமையாது.
இந்தக் குறியீட்டு எழுத்து கள், எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந் தவை என்பதாலும், பெருங்கற் கால குறியீடாகக் கருதப்படுவ தாலும், இவை 3,500 ஆண்டு களுக்கு முந்தையதாகவே கருத வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி தாழியின் மேற்புறத்தில் கிடந்த மண் கலையத்தில் சிறு பல் எலும்பு முழுமையாக கிடைத்துள்ள தால், இந்தக் குறியீட்டின் காலத்தையும் கதிரியக்க சோதனை மூலமாக ஓரளவு துல்லியமாக வெளிப்படுத்த முடியும். மேலும், வெப்ப ஒளிர்ம சோதனைகள் உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மூலம் உறுதியான காலவரைய றைக்கு வரமுடியும் என்றார்.
-
விடுதலை,22.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக