பக்கங்கள்

சனி, 29 அக்டோபர், 2016

கி.பி. 5ஆம் நூற்றாண்டு கல்வெட்டு திருவாரூரில் கண்டுபிடிப்பு


சென்னை, செப். 27- திருவாரூரில், கி.பி., 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிராமி எழுத்து மற்றும் வட்டெழுத்து கலந்த கல் வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில், கமலாலயம் செல்லும் வழியில், அனந்தீஸ்வரர் தியான மண்டபத்திற்கு, தெற்கு புறமுள்ள மதில்சுவரில், தமிழ் பிராமி மற்றும் வட்டெ ழுத்து கலந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லுரியின் தமிழ்த் துறை பேராசிரியர், சோ.கண்ண தாசன், தஞ்சை, பொந்தியாகுளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தில்லை கோவிந்த ராஜனும் இதை கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து, தில்லை கோவிந்தராஜன் கூறியதாவது: தமிழில், தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் சங்க காலத்திலேயே இருந்தன. பின், தமிழ் எழுத்து, பிராமி எழுத்தில் இருந்து வட்டெழுத் துக்கு உருமாறியது. பிராமியில் இருந்து, முழுமையாக வட்டெ ழுத்துக்கு மாற, எடுத்துக் கொண்ட காலகட்டத்தில், பிராமி எழுத்தும், வட்டெழுத் தும் கலந்தே எழுதப்பட்டன.
அந்த காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்தை தான், தற் போது, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கண்டு பிடித்துள்ளோம். இவை, பிராமி, வட்டெழுத்துக்களுக்கு இடைப்பட்ட, கி.பி., 5ஆம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதில், எட்டு, ஏழு என்ற எண்ணிக்கையில், இரண்டு வரிகளில், 15 எழுத் துக்கள் உள்ளன.
அவற்றில், ‘ற, எ, ஒ, ழ’ ஆகிய எழுத்துக்கள் மட்டும், படிக்கும் நிலையில் உள்ளன; மற்றவை, தொல்லியல் அறி ஞர்கள் ஆய்வு செய்தால் அடை யாளம் காணலாம். தமிழகத் தில், ஈரோடு மாவட்டம் அரச் சலுர், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி மற்றும் மதுரை மாவட்டம் மாங்குளத்தில் மட் டுமே, இந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
கல்வெட்டு ஆய்வாளர், எஸ்.ராமச்சந்திரன் கூறுகை யில், ‘’ற, த போன்ற எழுத்துக் கள் தெளிவாக தெரிகின்றன. மேலோட்டமாக பார்த்தால், இவை எழுத்தாகவோ, குறியீ டாகவோ இருக்க, சம வாய்ப் புகள் உள்ளன; முழு ஆய்வுக்கு பிறகே, இறுதி முடிவு எடுக்க முடியும்,’’ என்றார்.
-விடுதலை,27.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக