பக்கங்கள்

சனி, 29 அக்டோபர், 2016

2500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை அருகே 2500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை, செப்.30 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை அருகே 2500 ஆண்டுகள் பழமையான செம்புராங் கற்படுகை உலோக தொழிற்கூடத்தின் உருக்கு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்திருப்பது:கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் கி.மு. 483-அய்ச் சார்ந்த வெள்ளித் தாதுக் களைப் பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை அமைந்துள் ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆர் மேனியாவில் கி.மு.300-அய் சேர்ந்த உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதுவே, மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப் பட்டுள்ள உலோகப் பிரிப்பு அமைப்புகளில் பழமையானது என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஆதிச் சநல்லூர், ஆழ்வார் திருநகரி, கொடுமணல் உள்ளிட்ட இடங் களில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலோகப் பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள் பெரும் பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன. தமிழகத்தில் செம்பு ராங் கற்படுகையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன் களிலோ இருந்துள்ளன.
தற் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது பாறையை துளை யிட்டு உருவாக்கப்பட்டிருப்ப தால் இதனை சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்ன மாகக் கருதலாம்.
செம்புராங் கற்படுகையில் வெட்டப்பட்டுள்ள குழிகள் சுமார் இரண்டரை அடி ஆழம் உள்ளன. முழு வட்ட வடிவம் நீள் வட்ட வடிவம் என இரு வகைகளில் உள்ளன. உருக்கு உலை வட்ட வடிவத்துடன் அமைந்துள்ளதோடு, ஒரு அடி ஆழத்தில் நான்கு செ.மீ விட்ட முடைய துளையும் காணப் படுகிறது.
அதன் நேர் எதிராக மாடக்குழி போன்ற அமைப் பும், அதற்கு சற்று கீழாக வரி சையான நான்கு சிறு துளை களையும் காணமுடிகிறது, இத் துளையமைப்பானது காற்றை உலைக்குள் செலுத்துவதற்கான குருகு துருத்தியை பொருத்துவ தற்கானவை என்பதை ஊகிக்க முடிகிறது. நீள்வட்ட குழிகளில் உலோகத் தாதுக்களை உருக்கு வதற்கு முன்னதாக அடர்ப் பிக்கப் பயன்படுத்தப்பட்டி ருக்கவேண்டும்.
உலைக் குழிகளுக்கு மய்யத் திலுள்ள உருளை வடிவ குழி ஆழம் குறைவாகவும், அதிக விட்டத்துடன் முனைப்பகுதி கள் குறுகலாகவும் உள்ளது. இது தாதுக்களிலிருந்து பிரிக்கப் பட்ட உலோக கட்டிகள், ஆயுதம் உள்ளிட்ட வார்ப்புப் பொருட்களை குளிர்விக்கும் நீர்க்கலவை தொட்டியாக இருக் கலாம்.
ஏனைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் மூலம் இதை உணர முடிகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் இரும்பை யும், அலுமினியத்தையும் கொண்ட லேட்டரைட் கற்கன் எனப்படும் செம்புராங்கல் (அயர்ன், அலுமினியம், சிலிக்கேட்) இப்பகுதியில் மிகுதி யாக காணப்படுகிறது. மேலும், குவார்ட்சைட் எனப்படும் வெண்மைநிற சீனிக்கற்களும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுவதன் மூலம் உலோக உருக்கு ஆலை இப்பகுதியில் அமைந்துள்ளதை நிறுவ முடிகிறது.
சங்ககால மண் மற்றும் பெரிய வடிவ செங்கற்களால் அமைக்கப்பட்ட பொற்பனைக் கோட்டைக்கு வடபுறமாக இது அமைந்துள்ளது. இங்கு சங்க காலத்தை சார்ந்த தமிழிக்கல் வெட்டுகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதை ஆய்வு செய்துள்ள தொல்லியலாளர் கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தகவல் பகிர்ந் துள்ளனர். அதனடிப்படையில் இந்த பழங்கால தொழிற் கூடத்தை 2500 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம்.
மட்பாண்ட உருக்கு உலைகளே 3000 ஆண்டுகள் பழமை யானதாக கருதப்படும் நிலை யில் முழுவதும் செம்புராங் கல்லில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது செம்பு காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது, எனினும் பல்வேறுபட்ட வயதுகணிக்கும் நவீன தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் இந்த உருக்கு உலையின் காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இந்த ஆய்விற்கு கல்வெட்டு ஆய்வாளர்கள் முத்துக்குமார் பாண்டியன், சமூக ஆர்வலர் பழ.குமரேசன், அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் பொன்.கருப்பையா, ஆசிரியர்கள் கஸ்தூரி ரெங்கன், மலையப்பன், புதுகை செல்வா, சீ.அ.மணிகண்டன் உள்ளிட்டோர் உதவியாக இருந்துள்ளதாகவும் கல்வெட்டு ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,30.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக