பக்கங்கள்

வியாழன், 29 நவம்பர், 2018

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் - வைத்தியநாத அய்யருக்கு பைத்தியமா?

வைத்தியநாத அய்யருக்கு பைத்தியமா?
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் அய்ராவதம் மகாதேவன் ஏற்படுத்தியதாம்!
இதைவிட வரலாற்று மோசடி வேறு உண்டா?
=============================================
- மஞ்சை வசந்தன்
-----------------------------------------------------------------------------
திருக்குறளே மனுதர்மத்திலிருந்து வந்தது என்ற திரித்துக் கூறும் ஆரிய கூட்டமல்லவா? இப்போது பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தையும் அவருக்கு உரியதல்ல என்று கூறிவிட்டது!
தினமணி 27.11.2018 இதழில் தலையங்கத்தில் (ஆசிரியர் உரையில்) அதன் ஆசிரியர் வைத்தியநாதன், இன்று பரவலாகப் பெரியார் எழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம், உண்மையில் ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சீர்திருத்தம்.

தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை தினமணி நாளிதழில் அன்றைய ஆசிரியராக இருந்த ஐராவதும் மகாதேவன்தான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்துதான் அனைத்து இதழ்களும் எழுச்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தின என்பது வரலாற்று உண்மை என்று எழுதியுள்ளார்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தது 1935இல். அதுகுறித்த அறிவிப்பை  06.01.1935

பகுத்தறிவு இதழில் அறிவித்தார். அப்பகுதி இதோ:

க், ங், ச், க்ஷர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ  எழுத்துகள் மாற்றம்
சென்ற வாரம் பகுத்தறிவில் எழுத்தில் சீர்திருத்தம் என்று ஒரு சிறு உபதலையங்கம் எழுதி இருந்ததில் இவ்வார முதல் கொண்டு நமது பத்திரிகை பழைய பெயராகிய குடிஅரசு என்னும் பெயராலேயே வெளியிடலாம் என்று கருதி அதில்  க், ங், ச், க்ஷர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ  என்கின்ற எழுத்துகளை முறையே ணா - றா - னா - ணை - லை - ளை - னை என்று அச்சில் பிரசுரிக்கப்படும் என்பதாக எழுதி இருந்தோம் அந்தப் படிக்கே விஷயங்களை எழுத்துக் கோர்த்து இருந்தோம்.

வாசகர்கள் விஷயத்தைப் படிக்கும்போது ணா-றா-னா என்கின்ற எழுத்துகள் வரும் போது அவற்றை க், ங், ச்,  என்ற உச்சரிப்புப் போலவும், ணை - லை - ளை - னை என்கின்ற எழுத்துகள் வரும்போது ர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ என்ற உச்சரிப்புப் போலவும் உச்சரித்துக் கூட்டி  வாசித்துக் கொள்ள வேண்டுமாய் கோருகிறோம். இந்தப்படியே சில புஸ்தகங்களும் பிரசுரிக்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

[பெட்டிச் செய்தி -  பகுத்தறிவு அறிவிப்பு - 06.01.1935]
மேலும் 20.01.1935 நாளிட்ட குடிஅரசு தலையங்கத்தில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ்,
தமிழ் பாஷை எழுத்துகள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.......

தமிழ் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. எழுத்துகள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால் எழுத்துகள் கல்லிலும், ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சில் வார்த்துக் கோர்க்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்று வரை அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆதலால் யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டிய தாயிற்று.

புதிய மாறுதல்களால் அதாவது போக்குவரத்து வசதியின் காரணத்தால் ஏற்பட்ட பல தேச மக்கள் கூட்டுறவாலும், பல தேச பாஷை  சொற்களும், பல தேசப் பொருள்களும் கலக்கும்படி ஏற்பட்ட சம்பவங்களாலும், இன்று அநேக வார்த்தைகள், உச்சரிப்புகள் தமிழில் சர்வ சாதாரணமாய் கலந்து விட்டன. அவைகளை உச்சரிக்கும்போதும், எழுதும் போதும் தமிழ் பாஷையும், தமிழ் எழுத்தும் விகாரமாய் வெட்கப்பட வேண்டி இருக்கிற தன்மையில் இருக்கின்றன.

(அதற்கு தத்துவார்த்தமும், விதியும் இருக்கலாம்) ஆதலால் சில எழுத்துகள் வேறு பாஷைகளில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதுகூட மிக அவசியமாகும். அதற்கு வெட்கமாய் இருக்கும்பட்சம் புதியதாகவாவது எழுத்துகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க, இப்போது உயிர் மெய்  எழுத்துகள் என்று சொல்லப்படும் 18 எழுத்துகளிலும் ஒவ்வொன்றுக்கும் உள்ள இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு சப்தங்கள் கலந்த எழுத்துகள் தனித்தனி வடிவம் கொண்டு அதாவது கி, கீ, கு, கூ என்பது மாதிரியே 18 எழுத்துகளும் தனித்தனி உருவம் பெற்று 18 ஜ் 4 = ஆக மொத்தம் 72 எழுத்துகள் அதிகமாக அனாவசியமாக இருந்து வருகின்றன.

இந்தத் தனித்தனி வடிவங்கள் எதற்காக இருக்க வேண்டும்? எல்லா உயிர் மெய் எழுத்து களுக்கும் ஆ காரம், ஏ காரம் ஆகிய சப்தங்களுக்கு ,  ஆகிய குறிப்புகளைச் சேர்த்து எப்படி கா, கே என்று ஆக்கிக் கொள்ளுகின்றோமோ அதுபோலவே மேற்கண்ட கி, கீ, கு, கூ முதலிய சப்தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்.

உதாரணமாக ஜ, ஷ முதலிய கிரந்த அட்சரங்கள் என்று சொல்லப்படுபவைகளுக்கு இன்றும் உகரம், ஊகாரம் சப்தங்களுக்கு கு, கூ என்கிற மாதிரி தனி எழுத்துகள் இல்லாமல் உ, கரத்துக்கு  இந்த மாதிரி குறிப்புகளையும் ஊகாரத்திற்கு  இந்த மாதிரி குறிப்புகளையும் சேர்த்து ஜு, ஜூ, ஷு, ஷூ, ஸு, ஸூ, ஹு, ஹூ என்பதாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுபோல் தமிழ் எழுத்துகளிலும் கி, கீ, கு, கூ ஆகியவைகளுக்கு ,  என்பது போன்றவைகளையோ அல்லது வேறு விதமான குறிப்புகளையோ சேர்த்தால் அச்சில் 72 தனி எழுத்துகள் தேவையில்லை என்பதோடு பிள்ளைகள் தமிழ் கற்பதற்கும் 72 எழுத்துகளைத் தனியாக இந்த ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத சௌகரியமும் ஏற்படும். மற்றும் எழுத்துக் குறைவால் அச்சில் சவுகரியம் ஏற்படுவது போலவே தமிழ் எழுத்து டைப்ரையிட்டிங் என்று அச்சடிக்கும் யந்திரம் செய்வதிலும், மிகுந்த சவுகரியமும், விலை சகாயமாய் செய்யக்கூடிய நிலைமையும் ஏற்படும். எழுத்துகள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துகளைச் சேர்ப்பது, என்பது போலவே சில எழுத்துகளை அதாவது அவசியமில்லாத எழுத்துகளை குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.

உதாரணமாக, உயிரெழுத்துக்கள் என்பவைகளில் ஐ, ஔ என்கின்ற இரண்டு எழுத்துகளும் தமிழ் பாஷைக்கு அவசியமில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்பிராயமாகும். ஐகாரம் வேண்டிய எழுத்துகளுக்கு , இந்த அடையாளத்தைச் சேர்ப்பதற்கு பதிலாக ய் என்ற எழுத்தை பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐகார சப்தம் தானாகவே வந்து விடுகின்றது. உதாரணமாக கை என்பதற்குப் பதிலாக கய் என்று எழுதினால் சப்தம் மாறுவதில்லை என்பது விளங்கும்.

அதுபோலவே ஔ காரத்துக்கும், கௌ என்பதற்குப் பதிலாக கவ் என்றோ, கவு என்றோ எழுதினால் சப்தம் மாறுவதில்லை. கௌமதி - கவ்மதி, கவுமதி என்கின்ற சப்தங்கள் ஒன்று போலவே உச்சரிப்பதைக் காணலாம். இந்த வகையில் ஐ, ஔ, இரண்டு எழுத்து உயிரெழுத் திலேயே குறைத்து விட்டால் அதனாலும் பெரிதும் அனுகூலம் உண்டு.
ஆகவே கி, கீ, கு, கூ என்கின்ற சப்தங்களுக்கு தனிக் குறிப்பு வடிவங்கள் ஏற்படுத்துவதன் மூலம் குறிப்புகள் அதிகமானாலும் ஒ, ஔ குறிப்புகள் குறைபடுவதன் மூலம் கிட்டத்தட்ட சரி பட்டுப் போக இடமேற்படும். கையெழுத்து எழுதுவதற்கும் அசௌகரியமிருக்காது.

தமிழ் எழுத்துகளில் மேலே குறிப்பிட்ட இந்தப்படியான சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்படு மானால் அப்போது தமிழில் மொத்த எழுத்துகள் 46-ம் 7 குறிப்பு எழுத்துகளும் ஆக 53 எழுத்துகளில் தமிழ் பாஷை முழுவதும் அடங்கிவிடும். அதாவது உயிர் எழுத்து 10, உயிர் மெய் எழுத்து க முதல் ன வரை) 18, ஒற்றெழுத்து  19 எழுத்துகளின் குறிப்புகள் (அதாவது , , , ,   இதுகள் போல்) 7 ஆக மொத்தம் 54 எழுத்து களுக்குள் அடங்கி விடும்.  அச்சுக்கும் 54 அறைகள் (கேஸ்கள்) இருந்தால் போதுமானதாகும். பிள்ளைகளுக்கும் இந்த 54 எழுத்துகள் ஞாபகமிருந்தால் போதுமானதாகும்.

ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ என்கின்ற கிரந்த அட்சரங்களான எழுத்துகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் அதில் குற்றெழுத்து உள்பட ஒரு பத்து எழுத்து அதிகமாகி 64 எழுத்துகளாகலாம். ஆனால் இப்பொழுதோ மேற்படி 64 எழுத்துகளுக்குப் பதிலாக சுமார் 150க்கு மேல் 160 எழுத்துகள் வரை இருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பாஷையின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும் அவை சுலபத்தில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருப்பதைப் பொருத்ததே ஒழிய வேறல்ல. ஆத லால் இந்த மாற்றங்கள் நாளாவட்டத்தில் செய்யக் கூடியது என்று சொல்லுவதானாலும் ண, ணை முதலிய 7 எழுத்துகளைப் பொறுத்தவரையில் உள்ள மாற்றத்தை வாசகர்கள் இப்போது முதலே அனுமதிப்பார்கள் என்றே கருதுகின்றோம். இதுவரை பல தோழர்கள் ஆதரித்ததோடு மற்ற மாறுதல்களையும் எழுதியிருப்பதும் இப்பொழுதே செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டிருப் பதும் நமக்கு தைரியத்தைக் கொடுக்கின்றது. அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுதலும் உரியதாகும் என்று எழுதியுள்ளார்.

ஆக, தந்தை பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது 1935. அய்ராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராய் இருந்தது அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து.
அப்படியிருக்க, இன்று பெரியார் எழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சிர்திருத்தம் என்பது எப்படிப்பட்ட மோசடிப் பிரச்சாரம்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை திராவிடர் கழக ஏடுகள் பின்பற்றிய பின் தினமணியில் அதை அய்ராவதம் மகாதேவன் பின்பற்றி மற்ற இதழ்களுக்கு வழிகாட்டினார் என்பதே உண்மை. மாறாக, அய்ராவதம் மகாதேவன் உருவாக்கியது அல்ல.

அய்ராவதம் மகாதேவன் சிறந்த தமிழ் ஆய்வாளர். பெரியார் எழுத்தை தினமணியில் பின்பற்றியவர். அப்படிப்பட்டவர் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்ந்து கொண்டு மோசடியாகக் கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது.

பத்திரிகை தர்மமும், நீதி நேர்மையும், நாணயமும் கிஞ்சிற்றேனும் வைத்தியநாத அய்யரின் அடிமனதில் ஒட்டிக் கொண்டிருக்குமானால் தவறான செய்திக்கு திருத்தம் வெளியிட்டு அய்ராவதம் மகாதேவன் இடத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முயலட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக