பக்கங்கள்

சனி, 8 பிப்ரவரி, 2020

2500 ஆண்டு சமஸ்கிருதம் - 4500 ஆண்டு வரலாறு தமிழ்

கடவுளுக்குத் தேவ பாஷை சமஸ்கிருதம் மட்டும்தான் தெரியுமென்றால் அந்தக் கடவுளைத் தூக்கிக் கடலில் எறி என்றவர் எங்கள் தத்துவ பிதாமகர் தந்தை பெரியார்

செத்த மொழிக்கு ரூ.150 கோடி - திராவிட மொழிகளுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடா?

நாடாளுமன்றத்தில் மானமிகு  ஆ.இராசா மகத்தான போர் முழக்கம்!

புதுடில்லி, டிச.14  கடவுளுக்குத் தேவ பாஷை சமஸ்கிருதம்தான் தெரியும் என்றால், அந்தக் கடவுள்களைத் தூக் கிக் கடலில் வீசு என்று சொன்னவர் எங்கள் தத்துவ பிதாமகர் தந்தை பெரியார் என்றும், செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு ரூ.150 கோடி யும், வளமான திராவிட மொழிகளுக்கு ரூ.12 கோடியும் ஒதுக்கும் பாரபட்சம் ஏன் என்று இடி முழக்கம் செய்தார் திராவிட முன்னேற்றக் கழக கொள் கைப் பரப்பு செயலாளர் ஆ.இராசா அவர்கள்.

மக்களவையில், மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழக ஆராய்ச்சி மய்யம் அமைத்தல்' மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில்மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:

பேரவை மாற்றுத் தலைவர் அவர் களே, இந்த சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதாவில் பங்கேற்கின்ற வாய்ப்பினை வழங்கியதற்காக முத லில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அவையில் நான் 5-ஆவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றி இருந்தா லும், முதல் முறையாக என்னுடைய தாய்மொழியில் பேசுகின்ற வாய்ப்பை, அவசியத்தைப் பெற்று பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்க்கட்சிகளுக்கும்

அதிக நேரம் ஒதுக்குக!

முதலில் நான் பேரவைத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்வது, பொதுவாக மசோதாவில் பேசுகின்ற வர்களுக்கு நேரம் ஒதுக்கும்போது, அந்தந்த அரசியல் கட்சிகளின் உறுப் பினர்களின் எண்ணிக்கை அடிப் படையில் நேரம் ஒதுக்குவது வழக்கம். நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக் கிறேன்.

ஆனால், இந்த முறை நடந்து கொண்டிருக்கின்ற விவாதம், சற்று வித்தியாசமான கோணத்தில் சென்று கொண்டு இருக்கின்ற காரணத்தி னால், எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், கருத்துக்கு கருத்து என் கின்ற அந்த அடிப்படையில் அதிக நேரத்தை எதிர்க்கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும் என்று உங்களை நான் முதலில் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

மொழியை அழிக்க நினைத்தால் தி.மு.கழகம் எதிர்க்கும்!

இந்தச் சட்டத்தின் நோக்கம், சமஸ்கிருதத்தில் பட்டமேற்படிப்பு, முனைவர் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, சாஸ்திர கல்வியை கற்பிப் பது என்கின்ற நோக்கத்தோடு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக் கின்றது.

நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது நானோ எந்த மொழிக்கும் எதிரான வர்கள் அல்ல. ஆனால், எந்த ஒரு மொழியும், இன்னொரு மொழியின்மீது ஆதிக்கம் செலுத்துமானால், எந்த ஒரு மொழியும், தானே பெரிய மொழி, சிறந்த மொழி என்று சொல் கின்ற காரணத்தினால், இன்னொரு மொழியை அழுத்த நேர்ந்தால் அல்லது அழிக்க நேர்ந்தால் அதனை ஒருபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள்!

சமஸ்கிருதத்தை வளர்க்க வேண் டும் என்பதற்காக இந்த அரசு எடுக் கின்ற நடவடிக்கைகள் எங்களுக் கொன்றும் விரோதமானது அல்ல. ஆனால், அதே நேரத்தில் இந்த அவையில் பேசப்படுகின்ற கருத்துகள், அரசியல் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பிழையை ஏற்படுத்துகின்ற வகையில் இருந்துவிடக் கூடாது.

இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருந்தன என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொண்டாக வேண்டும். வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் ஒப்புக்கொண்டு இருக் கிறார்கள். சி.பி.இராமசாமி அய்யர், எல்லோருக்கும் தெரிந்தவர்தான். திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவா னாக இருந்தவர். அதற்குப் பிறகு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர்.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நேரு அவர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு எல்லா சமஸ்தானங்களையும் இணைக்க வேண்டும் என்று முடி வெடுத்த நேரத்தில், மாகாணங்களை இணைப்பதற்காக, நேஷனல் இண்டி கிரேஷன் கவுன்சில்- என்ற குழுவை ஆரம்பித்தபோது, அதன் தலைவராக யாரைத் தேர்ந்தெடுத்தார் என்றால்; சி.பி. இராமசாமி அய்யர் அவர் களைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.

சமஸ்கிருதத்திலிருந்து தமிழா?

ஏற்க முடியாது!

அவர் ஒரு சமஸ்கிருத பண்டிதர். அவர் என்ன சொல்கிறார் என்றால், "இந்த நாட்டினுடைய இரண்டு பண் பாடுகள், இரண்டு மொழி குடும்பங் களை அடிப்படையாகக் கொண்டது; ஒன்று, சமஸ் கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது, இன் னொன்று திராவிட மொழிகளை அடிப்படை யாகக் கொண்டவை. இவை இரண் டும் வேறு வேறு" - என்று சொன்னார்.

இதற்கு மூலம் எங்கே இருக்கின்றது என்று சொல்வதற்கெல்லாம் நேர மில்லை, நம்முடைய அமைச்சர் அவர்கள் கூட இங்கே சொன்னார்கள். நான் அதனை மறுக்கிறேன். சமஸ் கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்பதை ஒருபோதும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

திராவிடத்தின் தனித்த அடையாளங்கள்!

நாடாளுமன்றத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார் கள்: “நான் திராவிட இனத் தைச் சேர்ந்தவன், அப்படிச் சொல்லுகின்ற காரணத் தினால் நான் ஒரு குஜராத்திக்கோ, ஒரு மராட்டி யருக்கோ, ஒரு வங்காளியருக்கோ எதிரான வனல்ல.

நான் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணம், இந்த உலகத்துக்கு வழங்குவதற்கு எங்களிடத்தில் திட மான, தனித்த விழுமியங்கள் கொண்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தனித்த அடை யாளத்தோடு இவ்வுலகிற்கு வழங்க முடியும்'' என்று சொன்னார்.

எனவே, முதலில் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்வது; இந்தி யாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருக்கின்றன. ஒன்று, சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரியப் பண்பாடு, இன் னொன்று; தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளை அடிப்படை யாகக் கொண்டு இருக்கின்ற திரா விடப் பண்பாடு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

திறந்த மனதோடு

இந்த சமஸ்கிருத மொழி இந்தோ_அய்ரோப்பா குடும்பங்களின் தலையாய மொழிகளில் ஒரு மொழியாக இருக்கின்றது. அதேபோல தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் திராவிடக் குடும்பத்தின் அட்டவணையில் இருக்கின்ற மொழிகள் ஆகும். இரண்டுக்கும் சிறப்புகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. இரண்டிற்குமே இருக்கின்றது.

ஆனால், எதிலே குறை பாடும் இருக்கின்றது என் பதை அருள்கூர்ந்து திறந்த மனதோடு எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.

சமஸ்கிருத மொழி, அது ஒரு செவ்வியல் மொழி, ஆனால் அந்த மொழிக்கு என்ன ஆதாரம்? வேதநூல் இருக்கிறது. ஆகமம் இருக்கின்றது. பகவத் கீதை இருக்கின்றது. புராணங்கள், மகாபாரதம், இராமா யணம் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன வயது? எவ்வளவு தாராளமயமான மனப்பான்மையுடன் கணக்கிட்டு சொன்னால் கூட 2500 ஆண்டுகளுக்கு மேல் சொல்ல முடியவில்லை. நான் அல்ல, வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், தமிழுக்கு வாருங்கள்_- திராவிடத்திற்கு வாருங்கள். 4500 ஆண்டு களுக்கு முன்னால் வரலாறு இருக்கின்றது.

முதற் தமிழ்ச்சங்கம்! அதனை அன்றைக்கு அமைத்த மன்னன் காய்சின வழுதி. 450 புலவர்கள் கொண்டது முதற்சங்கம். அதிலே முதுநாரை, முதுகுறுகு எனும் இரு நூற்கள் தவிர எல்லாம் கடலில் போய் விட்டன. வெள்ளத்தில் போய்விட்டது! இது வரலாறு! இன்றைக்கும் கல் வெட்டில் இருக்கின்றது. நான் ஏதோ இதனை தேவபாஷை என்றோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ பேசவில்லை.

நம்பிக்கை அடிப்படையில் பேசுவது அழகல்ல!

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் நம்பிக்கை அடிப்படையில் பேசுவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல. மாண்புமிகு உறுப்பினர் நண்பர் சத்யபால்சிங் கூட- _ ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, மெத்தப் படித்தவர். இங்கே பேசினார் சமஸ்கிருதம் தெய்வ பாஷை என்று. நம்பிக்கை என்பது வேறு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், நான் சிறு வயதில் படிக்கின்றபோது, என்னுடைய தாய் தந்தை யர், வீட்டில் சிவன் படத்தை மாட்டி இருந்தார்கள். சிவன் தலையில் நிலா இருந்தது. நான் அதை அப்போது நம்பினேன் சிவனின் தலையில்தான் நிலா இருந்தது என்று. அது பகுத்தறிவு அல்ல, நம்பிக்கை! ஆனால், 1969 ஆம் ஆண்டு, ஆர்ம்ஸ்ட்ராங் தன்னு டைய இடது காலை எடுத்து நிலவில் வைத்தார் என்று சொன்னதற்குப் பிறகு, என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .

எனவே, அறிவியல் என்று வருகின்றபோது, நம் பிக்கை நகர்ந்து வழிவிட்டால்தான் அது ஆரோக் கியமான மனிதப் பண்பு. இல்லாவிட்டால் அது மனிதப் பண்பு அல்ல என்பதை இந்த அவையில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

4500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தமிழ் மொழி!

எனவே, சமஸ்கிருதத்திற்கு என்று 'நம்பிக்கை நூல்கள்' இருக்கின்றன. தமிழ்மொழிக்கு என்று பார்த்தால் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் முதற் சங்கம், மூவாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்கு முன் னால் இரண்டாம் சங்கம், அதனை அமைத்தவர் வெண்டேர் செழியன் என்ற அரசர். அப்போதுதான் தொல்காப்பியம், இசை நுணுக்கம் ஆகிய நூல்கள் கிடைத்தன. (குறுக்கீடுகள்). அதற்குப் பிறகு ஒன்று, இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்கணக்கு நூல் கள் வந்தன, இன்னும் பெருமையோடு சொல்கிறேன். நம்முடைய மாண்புமிகு பிரதமர், வெளிநாட்டிற்குப் போய்ச் சொல்கிறார்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்" _ என்று. பிரதமர் சொல்கிற, அந்த வாக்கியம் எதில் இருக்கின்றது என்றால் முதலாம் நூற் றாண்டில் வந்த இந்த எட்டுத் தொகையில் வருகின்றது என்பதை மறந்து விடக்கூடாது.

நான் இன்னொன்றை விளக்கமாக வேறுபாட்டைச் சொல்கிறேன். சமஸ்கிருதம் முதன்மை என்று சொல் கிறீர்கள். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் _ அதாவது நான்கு வர்ணங்களையும் நானே படைத் தேன் என்று _- இது சமஸ்கிருதம். ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்று சொல்வது எங்களுடைய திருக்குறள்.

ஸ்திரீ ஜென்மா, பாவ கர்மா; பெண்ணாக பிறப் பது பாவம்! _ என்று சொல்வது சமஸ்கிருதம். பெண் ணிற் பெருந்தக்க யாவுள _- என்று சொல்வது திருக் குறள். (குறுக்கீடுகள்).

இந்திய சிந்தனை மரபு என்பது சமஸ்கிருதத்திற்கு மட்டும் சொந்தமா?

இந்த அடிப்படையில் நான் வருகிறேன். இந்தச் சட்டத்தின் நோக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றால்...... இந்திய சிந்தனை மரபு, ஏதோ சமஸ் கிருதத்திற்கு மட்டும் தான் சொந்தம். முழு சொந்தம் என்று மறைமுகமாக ஒரு ரகசிய கள்ளத்தனத்தை மசோதாவில் நீங்கள் கொண்டு வருவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால், இந்தச் சட்டத்தின் 5ஆ-வது பிரிவு என்ன சொல்கின்றது என்றால், சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலைப் பரப்பப் போகின்றோம் என்று இதில் நீங்கள் சொல்கிறீர்கள்.

எனக்கு விந்தையாக இருக்கின்றது. ஒரு மொழி யைக் காப்பாற்றுங்கள். தவறில்லை. இந்த சமஸ்கிருதம் அழிவினுடைய விளம்பிலே நின்றுகொண்டிருக்கிறது.

1961இல் சென்செக்ஸ் கணக்கெடுத்த போது சமஸ்கிகிருதம் பேசுபவர்கள் மொத்தம் 2165 பேர். இப்போது 20,000.... (குறுக்கீடு) பிரிவு 5-இன்படி இந்தச் சட்டத்தின் நோக்கம் சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலைப் பரப்ப வேண்டும், மானுட அறிவியலைப் பெருக்க வேண்டும், சமூக அறிவியலைப் பெருக்க வேண்டும், ஒழுக்கத்தைப் பெருக்க வேண்டும் என் றெல்லாம் இந்த மசோதா வில் சொல்கின்றீர்கள்.

ஆனால், நான் கேட்கிறேன். இந்த சமஸ்கிருத மொழி உள்ளபடியே தேவ பாஷையாக இருக்கு மானால், இந்த மொழி இந்தியாவுக்கு சொந்தமாக இருக்கு மானால், அருமை நண்பர் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.

சமஸ்கிருதத்தை எங்களால் ஏற்க முடியாது!

பனாரஸ் பல்கலைக் கழகத்திற்கு ஒரு இஸ்லாமியத் தோழர், சமஸ்கிருதத்தில் முழுமை பெற்று, தேர்ச்சி பெற்ற பிறகு, பேராசிரியராக வந்த பிறகு, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து மறுத்தீர்களே, அதற்கு என்ன காரணம்? அப்படி என்றால், நீங்கள் சமஸ்கிரு தம் என்பது இந்து மதத்திற்கு சொந்தம் என்கிறீர்கள், அப்படிச் சொல்வதாக இருந்தால் இந்த மொழியை ஒரு காலமும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நான் திட்டவட்டமாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாம் இப்போது எங்கே நின்று கொண்டு இருக்கி றோம் என்றால், இந்த மொழி இறந்து விட்டதா? இருக்கிறதா' என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டு இருக்கிறது.

ஷெல்டன் பல்லாக், ஜான் ஸ்நெல்லிங் என்ற இரண்டு மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் சமஸ் கிருதம் ஒரு இறந்து விட்ட மொழி, மறைந்துபோன மொழி என்று சொல்கிறார்கள். ஆராய்ச்சியாளர் கென்னர், சமஸ்கிருதம் அழிந்து போகவில்லை ; அருகி வருகின்றது என்று சொல்கிறார்.

நிதி ஒதுக்குவதில் முரண்பாடு ஏன்?

நான் உண்மையிலேயே, மனம் திறந்து சொல் கிறேன், ஒரு அழிந்து கொண்டு இருக்கின்ற மொழிக்கு உதவிட வேண்டும்- தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிற நியாயமான எண்ணம் உங்களுக்கு இருக்கு மேயானால் அதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின் றீர்கள், 150 கோடி ரூபாய் 2017--2018- இல் சமஸ் கிருதத்திற்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். ஆனால், தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் என்று எல்லா வற்றுக்கும் சேர்த்து வெறும் 12 கோடி ரூபாய் ஒதுக்கி இருக் கிறீர்கள்.

தெரிந்தே தவறு செய்கிறது அரசு!

2014இல் 70 ஆயிரம் மாணவர்களை நீங்கள் திட்டமிட்டு தனியாக வேண்டுமென்றே சமஸ்கிருதம் படிக்க வைத்து இருக்கிறீர்கள். 41 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. 6 மொழிப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அந்த 6 மொழிப் பல்கலைக் கழகங்களில் மூன்று சமஸ்கிருதம், ஒன்று ஆங்கிலம், ஒன்று இந்தி, ஒன்று உருது இருக் கின்றது. ஒன்றுகூட தமிழுக்கு இல்லை . பிற செம் மொழிகளுக்கும் இல்லை.

இந்த அரசு தெரிந்தே ஒரு தவறு செய்கிறது. பிரதமர் உள்பட நான் குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் பேசுகிற போது என்ன சொல்கிறார்? மரபியல் அறிவியல், உடல் மாற்று அறுவை சிகிச்சை, காஸ்மெடிக் சர்ஜரி இவையெல்லாம் வேத காலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்; சமஸ்கிருதத்தில் இருப்பதாக சொல் கின்றனர். யார் நம்புவார்கள், 2500 ஆண்டுகளுக்கு முன்னால்?

இந்திய அறிவியல் மாநாடு அரசு செலவில் நடக்கின்றது. அதிலே கட்டுரை வாசிக்கப்படுகின்றது. அதில் வேத காலத்தில் விமானங்கள் இருந்தது என்று கூறி சமஸ்கிருதத்தை துணைக்கு அழைக்கின்றீர்கள். இப்படிப்பட்ட மூடத்தனமான கருத்துக்களை தயவு செய்து நிறுத்துங்கள். தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் முக்கியத்துவம் தாருங்கள்.

இவ்வாறு  தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராசா பேசினார்.

- விடுதலை நாளேடு, 14.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக