பக்கங்கள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

பார்ப்பனர் பார்வையில் திருக்குறள் தீண்டத்தகாததாம்!


1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும்பினார்.

அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலைப் பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர்  அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென்றார். அதற்கு அவர்கள், ‘அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத் தகாதது’ என்றனர். காரணம் வள்ளுவர் புலைச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.

ஏன் இப்படி ‘பிராமணர்’கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க “எங்களுக்கும் அவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் ‘பிராமணர்’கள் வந்தால் அவர்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு அவர்களைத் துரத்தி ‘பிராமணர்’கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” என்று கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.

- “குறளும் அயோத்திதாசரும்”

என்ற தலையங்கத்தில்

“செந்தமிழ்ச் செல்வி” மார்ச், 2000

- விடுதலை ஞாயிறு மலர் 18 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக