பக்கங்கள்

புதன், 26 பிப்ரவரி, 2020

இலத்தீன், கிரேக்க மொழிகளை விட தமிழ்தான் பழைய மொழி உலக தாய்மொழி தினத்தில் குமரி அனந்தன் பேட்டி

சென்னை,பிப்.22, உலக தாய்மொழி நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

உலகத்தில் உள்ள தாய் மொழிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அய்க் கிய நாடுகள் அவை சார்பில் பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. 20ஆ-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலக அளவில் புழக்கத்தில் இருந்த தாய்மொழிகள் 7006 என்றும் தாய்மொழிகளை காப்பாற்றவில்லை என்றால் 21-ஆம் நூற்றாண்டுக்குள் 300 மொழிகள்தான் இருக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான். சிலர் இலத்தீன், கிரேக்க மொழிகள் தான் மூத்த மொழி என்பார்கள்.

ஆனால், இந்த இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் தலா ஆயிரம் தமிழ் சொற்கள் இருக்கின்றன என்று சிவ காசியை சேர்ந்த அருணகிரி என்ற தமிழ்ப் பேராசிரியர் ஆய்வு செய்து தெரிவித்து உள் ளார். அப்படியானால் இலத் தீன், கிரேக்க மொழிகளை விட தமிழ்தானே பழைய மொழி.

அதேபோன்று, தமிழக கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யலாமே என்று நான் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மகராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து 1311-ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் உள்ள கோவில்களில் எல்லாம் தமிழ் மொழியில்தான் வழி பாடு நடந்தது என்று தெரிவித்து இருந்தார்.

அதே போன்று சங்க இலக்கியத்தில் ஜாதி என்ற சொல்லே இல்லை. இது போன்ற தமிழர்கள் பெரு மையை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கீழடி அருங்காட்சியகத்துக்கு நிதி ஒதுக்கீடு

அரசாணை வெளியீடு

சென்னை, பிப்.22 கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வின்போது கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் சிவகங்கை கொந்தகையில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஏற்கெனவே முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்காக 2019-2020ஆம் நிதியாண்டில் ரூ.30 லட்சமும், 2020-2021ஆம் நிதி ஆண்டில் ரூ.11.91 கோடியும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 22 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக