பக்கங்கள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

இலக்கியத்தில் தை மாதத்தின் சிறப்பு:


பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத் தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்ப தற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.

“தை இத்திங்கள் தண்கயம் படியும்“ - நற்றிணை

“தை இத்திங்கள் தண்ணிய தரினும்“ - குறுந்தொகை

“தை இத்திங்கள் தண்கயம் போல்” - புறநானூறு

“தை இத்திங்கள் தண்கயம் போல” - அய்ங்குறுநூறு

“தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ” - கலித்தொகை

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய குறிப்புகள் - மு. மணிவெள்ளையன்

தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகாராசன் பொங் கல் வரவேண்டும் என்பது நாட்டுப் புற நடை முறை மொழி வழக்கு.

பண்டைத் தமிழர் பொங்கல் விழா கொண் டாடும் வெற்றியைப் பற்றிப் புற நானூற்றிலே ஒரு பாடல் உண்டு. தொன்மையுடைய பொங்கலைப் பற்றிக் கருவூர் கந்தப் பிள்ளை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். பாடல்: 168.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் - தை மழை; நெய் மழை-என்பன போன்ற மறுமொழிகள் தமிழர் புத்தாண்டு வரவேற்பை உறுதிப்படுத்து வனவாகும்.

- விடுதலை ஞாயிறு மலர் 11 1 20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக