பக்கங்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாடு கால அமை வில் மாற்றங்கள் அடைந்துள்ளதா எனும் வினாவிற்கும், மாற்றம்  அத்துணை அடைந்துவிட வில்லை; ஆனால் வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறுதல் வேண்டும். வட ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்திலும், சமணர், ஐரோப்பியர் ஆகிய பிற நாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப்படைக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடைய வில்லை. பிற சமயங்களைப் போதித்த பார்ப்பனரும்,  சமணரும், புத்தரும், ஐரோப்பியக் கிறிஸ் தவரும், மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ முயன்றனர். இந்து சமயத்தின் வழிபாட்டு  முறையும், இலக்கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் வளம் பெற்றன. வடமொழியில் உள்ள சமய இலக்கியங்கள் பல, சங்கரர், இராமாநுசர், மாதவர் போன்ற தென்னாட்டவரின் மூல மாகத் தென்னாட்டுத் தத்துவங்கள் வடமொழியில் இடம் பெற்றன. சுநீதிகுமார் சட்டர்ஜி, இந்தியப் பண்பாட்டின் எழுபத்தைந்து விழுக்காடு - _ திராவிடப் பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். சாத் தனாரியற்றிய  மணிமேகலையை யும், வீரமாமுனவரியற்றிய தேம் பாவணியையும், உமறுப்புலவர் இயற்றிய சீறாப் புராணத்தையும் ஆராயும் காலை, இவர்கள் தம் சமயங்களின் கோட்பாடுகளைக் கூறினாலும், தமிழர் பண்பாட்டை எங்ஙனம் விளக்கியுளாரென்பதும் புலனா கின்றது.
- மறைத்திரு தனிநாயகர் அடிகளார்
-விடுதலை ஞா.ம.12.1.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக