பக்கங்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2018

பிழைஇன்றி எழுதுவீர்! (11)

எழுத்துச் சிக்கனம்


உயிர் 12, மெய் 18, உயிர்மெய் 216, ஆய்தம் 1. இத்தனை எழுத்துக்கள் தமிழில் இருப்பதால் மிகத் தொல்லையாய் இருக் கிறதென்று கூறுகிறார்கள்.

அவர்கள் கூறுவது சரிதான். எழுத்துக் களின் வரி வடிவத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். ஆம் என்று நாமும் கூறுகிறோம்.

வரிவடிவங்களைக் குறைக்க வேண்டிய முறையைப் பற்றிப் பலர் பலவாறு கூறுகிறார்கள். கூறுகிறவர்கள் எல்லாம் பொது நலன்கருதியே கூறுகிறார்கள். அதில் இம்மியும் அய்யமில்லை .

தமிழ் டைப்ரைட்டிங் மெசினில் மிகப்பல எழுத்துக்கள் அமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் அந்த மெசின் மற்றவைகளைவிட மிகப் பெரிதாகிவிடுகிறது. அச்சுக் கூடத்தில் எழுத்துப் பெட்டிகளின் அறைகளோ மிகமிக; ஒரு திண்ணையளவு பெரியதாக அமைய வேண்டிய திருக்கிறது.

கை, ளை என ஒரே இனத்தில் இரண்டு வகை. கை என்பது போலவே ளை என்றும் இருந்தால் என்ன முழுகி விடும்.

க இது குறில். கா இது நெடில். ஆனால் உ இது. குறில், ஊ இது நெடில். எத்தனை தொல்லை? உ குறில் உ£ நெடில் என்றால் ஏன் பொருந்தாது? - இப்படிச் சிலர் கேட்கிறார்கள்.

து இது குறில். தூ இது நெடில் என்றால் ஏன் பொருந்தாது - இப்படிச் சிலர் கேட்கிறார்கள்.

எழுத்தின் வரி வடிவத்தைச் சிக்கனப் படுத்தும் முறைபற்றி உங்கள் கருத்தென்ன என்று சிலர் நம்மைக் கேட்டார்கள்.

சொன்னோம். சொல்லுகிறோம். ஆயி னும் நம் கருத்தை யாரும் ஒப்பமாட்டார்கள். ஒப்பமாட்டார்கள் என்பதற்காக நாம் சொல்லாமல் இருப்பதுண்டா? - கிடையாது.

நாம் சொல்லும் முறையைக் கையாண் டால் டைப் ரைட்டிங் மெசினிலும் எழுத்துப் பெட்டி அறைகளிலும் 31 எழுத்துக்கள் போதும். ஒத்துக் கொள்ளுகிறவர்களின் நிலைமைதான் சரியில்லை.

க என்பது ஓர் எழுத்தன்று. க் என்பதும் அ என்பதும் சேர்ந்தது க. இப்படியேதான் உயிர்மெய் 216ம்.

பை என்பது ஓர் எழுத்தன்று. ப் என்பதும் ஐ என்பதும் சேர்ந்ததுதான் பை.

க என்று ஓர் எழுத்து வேண்டாம். க் அ என்றே குறிக்கலாம் என்கிறோம்.

கண்ணன் என்று எழுத வேண்டு மானால் க்அண்ண்அன் என்று குறிக்க.

விசிறி என்பதை வ் இச் இச் இ என்று குறிக்க வேண்டும். இந்த முறையை மேற்கொண்டால் உயிர் 12, மெய் 18. ஆய்தம் 1 ஆக 31 எழுத்துக்கள் போதும். எல்லாவற்றையும் எழுதிவிடலாம். இந்த 31 எழுத்தால், இப்படி எழுதுவதால் ஒரு வரியில் மிகப்பல எழுத்துக்கள் போட வேண்டும் என்று கூறலாம். அப்படி யில்லை. சில எழுத்துக்களே அதிகமா கின்றன.

வழக்கத்தில் வருவது முடியாது என்று கூறலாம். வழக்கத்தில் வருவது இலேசு என்று தோன்றுகிறது.

அஃது பெரிது ஆயினும் எளிது என்பதை அஃத்உ ப்எர் இத்உ. ஆய் இன்உம் எள் இத்உ என்று எழுதுக. சில நாட்கள் தொல்லையாக இருக்கும். பிறகு எளிதாகிவிடும்.

இங்கிலீஷிலும் பிரஞ்சிலும் இப்படித் தானே. பு என்பதை இங்கிலீஷில்  என்று தானே போடுகிறான். பிரஞ்சிலோ அவளப் பன்!  என்று மூன்று எழுத்துக்கள் போட வேண்டும்.

உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1.

ஆக 31 எழுத்தைக் கொண்டே எழுத் துக் குடித் தனத்தைச் சிக்கனப்படுத்தலாம் என்று கூறினோம்.

ஒரு தோழர் தெரிவிக்கிறார். நீங்கள் சொல்லிய வழி ஏற்றது. அதனோடு ஆ என்பதை அ£ என்றும் ஈ என்பதை இ£ என்றும். சுருக்கலாம் என்கிறார். செய்யலாம். என்கிறோம் அப்படியே.

அதன்படி

ஈவது விலக்கேல் என்பதை

இவ்அத்உ வ்இல் அக்க்பால் என்று எழுதுக.                           (தொடரும்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக