பக்கங்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2018

சமஸ்கிருதம் பழமையான மொழியா?

கிறிஸ்து பிறப்பிற்கு முன்பும் இன்றும் சமஸ்கிருதம் ஒரு சிறு குழுவினரின் ரகசிய மொழியாகவே உள்ளது என்கிறார் பேராசிரி யர் ராஜேந்திர பிரசாத் சிங்.


பீகார் மாநிலம் கயாவில் நடந்த கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய விவசாயத் துறை  பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரி யர் முனைவர் ராஜேந்திரப் பிரசாத் கூறிய தாவது, இன்று பல தளங்களில் சமஸ்கிருதம் இந்தியாவில் மிகவும் பழைமையான மொழி என்று கூறப்பட்டு வருகிறது, இது உண்மை யல்ல, சமஸ்கிருதம் பழைமையான மொழி என்றால் இந்தியா முழுவதும் பொதுப் பழக்கத்தில் இருந்த பிரகிருத மொழியில் எந்த ஒரு இடத்திலும் சமஸ்கிருதம் பற்றிய சிறிய குறிப்புகள் கூட இல்லை. ஒரு மொழி என்பது அன்றைய வாழ்வியல் நடைமுறையில் ஏற்பட்ட தாக்கத்தை பதிவு செய்யும் ஒன்றாக இருக்கும், இன்றைய இந்திமொழியில் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. ஆனால் அது பொதுவில் பேசுவதற்கேற்ப வடிவமைக் கப்பட்டுள்ளது, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கூட நேரடி சமஸ்கிருதம் பேச்சு மொழி யாக வரவில்லை, வரமுடியாத நிலையில் உள்ளது. இதிகாசங்கள் எனப்படும் வேதம், ராமாயணம், மகாபாரதம் இதர சமஸ்கிருத கதைகள் உயர்குடியினரிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆகையால் முந்தைய காலங்களில் சமஸ்கிருத தாக்கம் அதிகமான மக்களிடையே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, பொதுமக்களிடையே அதிகம் பிரபலமாக இருந்த நாத்திக கவிஞரான கபீர்தாஸ், நாதபந்தாஸ் (லிங்காயத்), ராமனந்தா போன்றோர்களின் பாடல்களில் சமஸ்கிருதம் எந்த இடத்திலும் காணப்பட வில்லை, இவர்களைத் தொடர்ந்து பின்வந்த பிரபல கவிஞர்களின் பாடல்களிலும் சமஸ் கிருத வார்த்தைகள் இல்லை, இதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட சமஸ்கிருதம் வழக்கத்தில் இல்லாத மொழியாகவே இருந்தது, அன்றும் இன்றும் சமஸ்கிருதம் ஒரு நிழல் மொழியாகவே இருந்து வருகிறது.

கிறிஸ்துவிற்கு முன்பான எந்த ஒரு பழைமையான பொதுவில், புழக்கத்தில் இருந்த மொழிகளிலும் சமஸ்கிருதம் காணப்படவில்லை, சமஸ்கிருத எழுத்துக் கள் கிறிஸ்துவிற்கு பிறகுதான் முழு வடிவம் பெற ஆரம்பிக்கிறது. அசோக ரின் காலத்திலும், சந்திரகுப்த மவுரியா வின் காலத்திலும் சமஸ்கிருதம் பொது மொழியாக இருந்ததில்லை, பிராகிருதம் மற்றும் பாலிமொழியே வெகுஜன மக்களின் மொழியாக இருந்தது,  மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிய தொல்பொருள் ஆய்வுகள் மிகவும் முக்கியமான ஒரு சான்றாக உள்ளது, ஆனால் இந்தியாவில் தொல்பொருள் சான்றுகள் அனைத்தும் குறிப்பிட்ட நபர் களின் ஆதரவு தளமாக மாற்றப்பட்டு விட்டது, இப்படி மாற்றப்பட்டதால் சமஸ்கிருதம் பற்றிய ஒரு தெளிவான நிலையை அவர்களால் கூட நிலை நிறுத்த முடியவில்லை. உண்மையில் இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்றுவரை இல்லாத ஒன்றை நிலைநிறுத்த பாடுகின்றனர். ஆய்வு களைப் பொருத்தவரை இல்லாத ஒன்றை என்றுமே நிலை நிறுத்த முடியாது, உண்மையை மறைக்க முயலும் போது முழுமைபெறாத ஒரு ஆய்வாகவே இருக்கும், ஆகவே தான் இந்தியாவில் இன்றுவரை சமஸ்கிருதம் குறித்த உறுதியான சான்றுகளை யாராலும் தரமுடிய வில்லைஎன்று கூறினார்.

- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக