பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது! ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது!


ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகளின் மொழியியல் அறிஞர்கள் ஓராண்டுக் காலம் ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளனர்.


சமஸ்கிருதம் தொன்மொழி, செம்மொழி என்பதெல்லாம் மோசடியானவை. சமஸ்கிருதம் எழுத்தற்ற பேச்சு மொழி. அதை எழுதாக்கிளவி என்றே அழைப்பர். தமிழிலிருந்துதான் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் பின்னாளில் தரப்பட்டது.

தமிழ்ச் சொற்களை மாற்றித்தான் சமஸ்கிருத சொற்களை உருவாக்கினர்.

சலம் என்ற தமிழ்ச் சொல்லை ஜலம் என்றும், சுரம் என்ற தமிழ்ச் சொல்லை ஜுரம் என்றும், அரசன் என்ற தமிழ்ச் சொல்லை இடவல மாற்ற முறையில் ராஜன் என்று ஆக்கினர். இந்த உண்மைகளை மறுக்க எந்த ஆரிய பார்ப்பானாவது தயாரா? உண்மையான தொன்மொழியாம் செம்மொழித் தமிழைத் தமிழர்கள் போற்றிக் காக்க வேண்டும்.

போலி மொழியான செத்த சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்துத் தடுக்க வேண்டும்!

- உண்மை இதழ், 16-30.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக