பக்கங்கள்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

இந்தி இந்தியாவில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழியா ?


இல்லை ! இல்லவே இல்லை!

இந்தியின் நடைமொழிகள்
பின்வருமாறு 81 எனச்
சொல்லப்படும் .

1951 ஆம் ஆண்டுக் குடிமதிப்பின் (Census) படி ,
நடுவன் பைதிரத்தில் (மத்தியப் பிரதேசத்தில் ) இந்தியின் மொழிகளும் கிளைமொழிகளும் நடைமொழிகளும் நடைவழக்குகளும் வருமாறு :

1.இந்தி
2.உருது
3.இந்துத்தானி
4.பீகாரி
5.மைதிலி
6.இராசத்தானி
7.பிரபாசை
8.பகரி
9.மேவாரி
10.செயபுரி
11.மால்வி
12.சத்தீசகடி
13.மார்வாரி
14.ஆசுமீரி
15.பந்தேலி
16.பலோகி
17.உலோடி
18.கிராரி
19.இரகோபான்சி
20.தமிதி
21.சடி
22.பர்தேசி
23.கலாரி
24.பாடு
25.பங்கி
26.கோசாவி
27.ஓகி
28.சுவதி
29.நுனியா
30.பைகனி
31.பாண்டோ
32.அதுகுரி
33.பசுதாரி
34.மிர்சுனி
35.மகேசுரி
36.போயாரி
37.குர்சார்
38.இராசுகடி
39.நிமாதி
40.கால்பி
41.மராரி
42.போவாரி
43.சடாரி
44.பான்சாரி
45.இராசபுதனி
46.கோர்காலி
47.மாதுரி
48.குருமாலி
49.மீர்சாபுரி
50.கோசாங்காபாடி
51.அபு
52.பர்பி
53.முசல்மானி
54.உலோதாந்தி
55.போபாலி
56.கோடுவாரி
57.பூலியா
58.சங்கலி
59.இரங்கடி
60.அகரி
61.புவானி
62.வாணி
63.கந்தால்
64.இரிவை
65.பரதபூரி
66.கோதியானி
67.பிரதாபகடி
68.கங்கேரி
69.கங்காபாடி
70.ஆகராவாலி
71.மேர்வாரி
72.தேவநாகரி
73.உத்தாரி
74.பாமி
75.உற்கேதிபோலி
76.பூலி
77.கோரகபூரி
78.சார்மாலி
79.பான்சாரி
80.கோர்தி , மற்றும்
81.பாசபுரி.

        தென்னாட்டாரை ஏமாற்றுவதற்கு இவையெல்லாம் ஒரே மொழியாகக் காட்டப்படுகின்றன.
தென்னாட்டுத் தலைவரும்
இதைக் கவனியாதும் கருதாதும் தத்தம் நாட்டை இந்தியார்க்குக் காட்டிக்
கொடுப்பதிலேயே முனைந்து
நிற்கின்றனர் .

           இந் நடைமொழிகளின்
தொகைப்பெருமையையும்
இவை வழங்கும் நிலப்பரப்பின் விரிவையும்
(கிழமேலாய்ப் பீகாரிலிருந்து
இராசத்தான் வரையும்  தென்வடவாய்ப் மத்தியப் பைதிரத்திலிருந்து உத்தரப்
பைதிரம்வரையும்) நோக்குவார்க்கு , இந்தி என்பது பல உடன்பிறப்பு மொழிகளையும் பற்பல நடை
மொழிகளையும் கொண்ட மாபெருங் கலவை என்பது தெரியவரும்.பதினொரு வகையாகவும் பதினைந்து வகையாகவும் சொல்லப்பெறும் இவ்விந்தி
பேசுவோர் தொகை 1850 - ல்
4 இலக்கமாயிருந்து , 118
ஆண்டிற்குள் 14 கோடியாகப்
பெருகியுள்ளது. 
இப் பெருக்கம் பல்வேறு சூழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்டதாகவே குடிமதிப்புக்
கணக்குகள் காட்டுகின்றன ;
அறிக்கைகளுங் கூறுகின்றன.

சான்று :பக் 60 - 62.
"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் "
ஆசிரியர்:மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
பதிப்பாசிரியர் : புலவர் அ.நக்கீரன்
தமிழ்மண் பதிப்பகம் ,
சென்னை 600 014.
- ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் முகநூல் பதிவு, 08.10.24